இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், ஜனவரி 30

பாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை.

தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
 
படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.

ஞாயிறு, ஜனவரி 29

புதுப்பிக்கப்படாத ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் உண்டு.

சென்னை : நடப்பு 2012ம் ஆண்டில் குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் காலம், வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நலன் கருதி, ஜன., 22, 29, பிப்ரவரி 5, 12 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில், குடும்ப அட்டை புதுப்பித்தல் மற்றும் பொருட்கள் வழங்கும் பணியை மேற்கொள்ள அனுமதித்தும், அதற்கு பதிலாக ஜன., 23, 30, பிப்ரவரி 6, 13ம் தேதிகளில், ரேஷன் கடைகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சென்று, கார்டுதாரர்கள் இல்லாத பட்சத்தில், அவர்களுக்கு பொருள் வினியோகத்தை நிறுத்தி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்ற செய்தி தவறானது. எந்த காரணத்தைக் கொண்டும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது. இவ்வாறு உணவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

புதன், ஜனவரி 25

ஜனவரி 27, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி !

 துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாத் பெருவிழாவினையொட்டி நடத்தி வரும் பேச்சுப்போட்டி 27.01.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷல் பள்ளியில் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.
 
அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன்மாதிரி எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் உள்ளிட்ட கருத்துக்களில் உரை நிகழ்த்தலாம்
.
அனைத்து சமூகத்தினரும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
போட்டியாளர்கள் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். பேசுவதற்கான நேரம் 5 நிமிடங்கள். மேற்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் தமிழில் மட்டுமே பேச வேண்டும். போட்டி நடைபெறும் அரங்கினுள் போட்டியாளர்கள் 15 நிமிடங்கள் முன்னதாக வந்து தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு 050 5196 433 / 055 800 7909 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிகழ்விற்கு ஈடிஏ அஸ்கான், லேண்ட்மார்க் ஹோட்டல், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், அல் மஸ்ரிக் இண்டர்னேஷனல், அரபியா டாக்ஸி, அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ், இந்தியா சில்க் ஹவுஸ், அபுதாபி செட்டிநாடு உணவகம், நிகாஹ்.காம், அப்கிரேட் டயர்ஸ், பிரிமியர் ஆர்பிட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை அணுசரனை வழங்கியுள்ளன.

செவ்வாய், ஜனவரி 24

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்த நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சட்டென்று வந்து ஒட்டிக்கொண்டு விடுகின்றன. 
   Tips to Prevent Winter Colds - Food Habits and Nutrition Guide in Tamil 
பொதுவாக, கோடைகாலத்தில் குளிர்பானங்களுக்கு எல்லோருமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காரணம், அப்போது வெயில் காரணமாக உடலில் அதிக அளவில் வியர்வை வெளியாகும், சக்தி இழப்பு உடனே ஏற்படும். இதுதவிர, "அல்கலைன் சிட்ரைட்" என்ற அமிலமும் அதிக அளவில் வெளியாகிறது.

புளிப்பு சுவை கொண்ட மோர், பானகம் உள்ளிட்ட பானங்களை அப்போது அருந்துவதன் மூலம், அந்த அமில இழப்பை சரி செய்து கொள்ளலாம். இதே புளிப்பு சுவை கொண்ட குளிர்பானங்களை குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. மீறி எடுத்துக்கொண்டால், உடலில் உள்ள "அக்கலைன் சிட்ரைட்" அமிலத்தின் அளவு அதிகரித்து சைனஸ், மார்புச்சளி, ஜலதோஷம் போன்ற பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.


அதனால், குளிர் காலத்தில் "கூல் டிரிங்ஸ்" மட்டுமின்றி புளிப்பு சுவை கொண்ட பானங்களும் வேண்டவே வேண்டாம். ஏன்... புளிப்பு சுவை கொண்ட வைட்டமின்-சி பழங்களைக்கூட அளவோடுதான் சாப்பிடவேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.

வியாழன், ஜனவரி 19

பள்ளி மாணவர்களுக்கான இலவசங்கள்: அரசு அறிவிப்பு-18-01-2012.

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு, இலவச சீருடை, காலணி, புத்தகப் பை, வண்ணப் பென்சில் ஆகியவற்றை வழங்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, "இந்த 2012-13 கல்வியாண்டு முதல் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் ஆகியவற்றில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 1வது வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் இரண்டு இணை சீருடையுடன், கூடுதலாக 2 இணை சீருடை அதாவது மொத்தம் நான்கு இணை சீருடை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் 6ம் வகுப்பு மற்றும் அதற்குமேல் பயிலும் மாணவர்களுக்கு அரைகால் சட்டைக்கு பதிலாக, முழுக்கால் சட்டையும், மாணவியர்களுக்கு பாவாடை-தாவணிக்குப் பதிலாக சல்வார்-கமீசும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 418 மாணவர்களும், 23 லட்சத்து 51 ஆயிரத்து 660 மாணவிகளும் என மொத்தம் 46 லட்சத்து 85 ஆயிரத்து 78 பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு 259 கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கு விலையில்லா ஒரு இணை காலணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 35 லட்சத்து 556 மாணவ-மாணவியர் ஒவ்வொருவருக்கும் 96 ரூபாய் மதிப்பில், 1 இணை காலணியும், 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 27 லட்சத்து 95 ஆயிரத்து 639 மாணவ-மாணவியர் ஒவ்வொருவருக்கும் 127 ரூபாய் மதிப்பில், 1 இணை காலணியும், 9 மற்றும 10ம் வகுப்பு பயிலும் 18 லட்சத்து 5ஆயிரத்து 933 மாணவ-மாணவியர் ஒவ்வொருவருக்கும் 142 ரூபாய் மதிப்பில் ஒரு இணை காலணியும் இந்த ஆண்டே வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த விலையில்லா காலணி வழங்கும் திட்டத்திற்காக, அரசுக்கு 94 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன்மூலம் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவ-மாணவியர் பயன்பெறுவர்.
இதுமட்டுமில்லாமல், மாணவ-மாணவியர்களிடம் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான ஜியோமெட்ரி பாக்ஸ், கிராமப்புற மாணவ-மாணவியருக்கு இதுவரை கிடைக்கப்பெறாத வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் படங்கள் ஆகியவற்றை வரும் கல்வியாண்டு(2012-13) முதல் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின்படி, 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 75 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும், 4 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும், 8 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு 125 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும் வழங்கப்படும். இத்திட்டத்தினால் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ-மாணவியர் பயன்பெறுவர்.
இதேபோன்று, 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 35 ரூபாய் மதிப்பில் ஜியோமெட்ரி பாக்ஸ் வழங்கப்படும். இதனை மாணவ-மாணவியர் 2 கல்வியாண்டுகளுக்கு பயன்படுத்தலாம். இதனையடுத்து ஒவ்வொரு கல்வியாண்டிலும் 6 மற்றும் 8 மற்றும் 10 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு ஜியோமெட்ரி பாக்ஸ் வழங்கப்படும். இதனால் 46 லட்சத்து ஒர் ஆயிரத்து 572 மாணவ-மாணவியர் பயன்பெறுவர்.
1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 20 ரூபாய் மதிப்பிலான வண்ணப் பென்சில்கள் வழங்கப்படும். இதனால் 35 லட்சத்து 556 மாணவ-மாணவியர் பயன்பெறுவர். 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 50 ரூபாய் மதிப்பிலான புவியியல் வரை படங்கள் வழங்கப்படும். முதல் ஆண்டில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கும், இரண்டாம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 6ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு மட்டும் புவியியல் வரை படங்கள் வழங்கப்படும். இதனால் 46 லட்சத்து ஒர் ஆயிரத்து 572 மாணவ-மாணவியர் பயன்பெறுவர்.
புத்தகப் பை, ஜியோமெட்ரி பாக்ஸ், வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்கும் இந்த திட்டத்தின் கீழ் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ-மாணவியர் பயன்பெறுவர். இத்திட்டத்திற்காக அரசுக்கு 2012-13 ஆம் கல்வியாண்டில் 136 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ-மாணவியர் பொதுத் தேர்வுகளில் அதிக அளவு மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவ-மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதல் பரிசான 1,500 ரூபாயை 3,000 ரூபாயாகவும், இரண்டாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயை, 2,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 500 ரூபாயை 1,000 ரூபாயாகவும், 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக வழங்கப்பட்டு வரும் 3,000 ரூபாயை 6,000 ரூபாயாகவும், இரண்டாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 2,000 ரூபாயை 4,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயை 2,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம், அரசுக்கு 11 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
மாணவ-மாணவியர் நலன்களுக்காக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் மூலம் பள்ளிகளில், குறிப்பாக கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும், இடைநிற்றல் முழுவதுமாக தடுக்கப்படவும் வழிவகுக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், ஜனவரி 17

துபாயில் திருமாவளவன் எம்.பிக்கு வரவேற்பு.

 துபாயில் திருமாவளவன் எம்.பிக்கு வரவேற்பு

துபாய் : துபாயில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுஃப் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 16.01.2012 திங்கட்கிழமை மாலை லோட்டஸ் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி, முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் உள்ளிட்டோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுஃப் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். துபாய் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு மலர் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.

ஏற்புரை நிகழ்த்திய திருமாவளவன் அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அமீரகத்துக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் வருகை புரிந்த போது அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தினை நினைவு கூர்ந்தார். மேலும் சிறுபான்மை மக்களுடன் தனக்குள்ள இணக்கமான நட்பினை விவரித்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழக எம்பிக்கள் குழு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வருகை புரியவேண்டியதன் அவசியம் குறித்தும் வளைகுடாத் தமிழர்களின் நிலை குறித்து அறிய வேண்டியதையும் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் எடுத்துரைத்ததை ஆமோதித்து அது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைஅக்துபாய் லேண்ட்மார்க் ஹோட்டல் மேலாண்மை இயக்குநர் சாதிக் காக்கா, அஜ்மான் ஆரிஃபின் குழும மேலாணமை இயக்குநர் ஆரிஃப், ஈமான் அமைப்பின் துணைப்பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, தேரா டிராவல்ஸ் மேலாளார் ஹாஜா முஹைதீன், அஜ்மான் ஹமீது, அம்மாபட்டிணம் அப்துல் ரஹ்மான், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், அப்துல்லாஹ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

உலகின் மிகப்பெரிய திருக்குர்ஆன் புத்தகம்.

ஆப்கானிஸ்தானில் உலகின் மிகப்பெரிய குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது. 7 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட இப்புனித நூல் 218 பக்கங்கள் கொண்டதாகவும், 30 வகையான எழுத்துவடிவங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்நூலை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளன.

மொஹமட் சபீர் யாகோட்டிஹுஸைனி கேத்ரி என்பவர் தலைமையிலான குழுவினர் இந்நூலை உருவாக்கியுள்ளனர். இந்நூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முக்கிய மதப் பிரமுகர்கள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 

வியாழன், ஜனவரி 12

எம்ப்ளாய்மெண்ட் - வசந்தகாலம் வருகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயரிங் உதவியாளர் பணியிடங்கள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயரிங் உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: ஜூனியர் என்ஜினீயரிங் உதவியாளர் - 20

கல்வித் தகுதி: இயற்பியல்/ வேதியியல்/ கணிதம் துறையில் பி.எஸ்சி. அல்லது கெமிக்கல்/ மெக்கானிக்கல்/ எலெக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ். ரிஃபைனரி/ பெட்ரோகெமிக்கல்/ ஃபெர்டிலைசர்/ கெமிக்கல் கம்பெனி/ ஆர்.ஓ. பிளாண்ட் நிறுவனங்களில் ஒரு வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது: 26க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.01.2012


மேலும் விவரங்களுக்கு: www.iocl.com




புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் 567 காலியிடங்கள்

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவிகள் அனைத்தும் பொதுப் போட்டி எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

பதவி: லோவர் டிவிஷனல் கிளார்க் - 400

கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் Typewriting Lower Grade தேர்வை எழுதியிருக்க வேண்டும்.
வயது: 32க்குள்
பதவி: ஸ்டோர் கீப்பர் - 115
கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ்.
வயது: 32க்குள்
பதவி: ஜூனியர் கிளார்க் - 28
கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
வயது: 32க்குள்
பதவி: டைப்பிஸ்ட் - 24
கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் Typewriting Lower Grade தேர்வை எழுதியிருக்க வேண்டும்.
வயது: 32க்குள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.01.2012

மேலும் விவரங்களுக்கு: www.pon.nic.in/recruitments

இந்திய அஞ்சல் துறையில் ஓட்டுநர் பணியிடங்கள்

கோயமுத்தூர் மெயில் மோட்டார் பணிப்பிரிவில் ஓட்டுநர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Time Scale Driver - 03

கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் HMV LMV லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் நான்கு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 5,200 - 20,200 கிரேடு சம்பளம் 1,900

வயது: 28க்குள்

பதவி: M.V (Mechanic (Skilled) - 01

கல்வித் தகுதி: மெக்கானிக் பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சி அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். HMV வாகன லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
வயது: 30க்குள்
விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டபின் தகுதியானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப்படிவத்தில் பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படத்தை ஒட்டி அட்டெஸ்ட் பெற்றிருக்க வேண்டும். வயது, கல்வித் தகுதி, அனுபவம், ஓட்டுநர் உரிமம், ஜாதி மற்றும் வகுப்பு ஆகியவற்றிற்கான சான்றிதழ்களின் நகல்கள் அட்டெஸ்ட் பெறப்பட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை விரைவு அஞ்சல் அல்லது பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப கவரின் மீது ’Application for the Post of --------- in Mail Motor Service Coimbatore’ என்று (பணியின் பெயர்) எழுத வேண்டும்.

கடைசி தேதி: 04.01.2012

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Manager, Mail Motor Service, Good Shed Road, Coimbatore - 641001.

மத்திய அரசின் முஸ்லீம்களுக்கு 4.5% உள் ஒதுக்கீட்டுக்கு தேர்தல் ஆணையம் திடீர் தடை.

டெல்லி: முஸ்லீம் சமுதாயத்தினருக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து விட்டது. இதனால் உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகுதான் இந்த முடிவை மத்திய அரசு அமல்படுத்த முடியும்.


கடந்த மாதம்தான், இந்த உள் ஒதுக்கீடு குறித்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்து ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள உத்தரவில், அனைத்து மாநில சட்டசபைத் தேர்தல் முடியும் வரை இந்த திட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

உ.பியில் முஸ்லீம் வாக்காளர்கள் கணிசமாக உள்ளனர். இவர்களைக் கவரும் வகையிலேயே இந்த உள் ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்தது என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தன என்பது நினைவிருக்கலாம்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், வாக்கு வங்கி அரசியலை முழுமையாக பயன்படுத்த காங்கிரஸ் முயல்கிறது என்பது இந்த உள் ஒதுக்கீடு முடிவின் மூலம் தெரிகிறது. இதை தேர்தல் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது. சிறுபான்மையினருக்கும், இதர பிற்பபடுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க மத்திய அரசு மறைமுகமாகத் தூண்டுகிறது என்றார்.

முன்னதாக முஸ்லீம்களுக்கு உள் ஒதுக்கீட்டின் அளவு 9 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று கடந்த வாரம் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியிருந்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால் பாஜகவின் புகார்களை குர்ஷித் மறுத்துள்ளார். முஸ்லீம்களுக்கு உள் ஒதுக்கீடு என்பது காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சமாகும் என்று அவர் கூறினார்.

திங்கள், ஜனவரி 9

வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு ஓய்வூதியம்!

ஜெய்ப்பூர்: வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். 

வெளிநாட்டு இந்தியர்களின் 10வது மாநாடு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில், 60 வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் 1,900 பேர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேசியதாவது: 
வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்கள், தங்களுக்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கை ஏற்று, ஓய்வூதியம் மற்றும் இன்சூரன்ஸ் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் 50 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளை சேர்ந்த இந்திய தொழிலாளர்களிடையே தங்கள் வருங்காலத்துக்காக சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முடியும். 
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சந்தாதாரர் சார்பிலும் அரசு ஆண்டுக்கு ஸி1000 செலுத்தும். அதே நேரத்தில், சந்தாதாரர்கள் ஒவ்வொருவரும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். பெண்களுக்கு அரசு தனது பங்காக ஸி2 ஆயிரம் செலுத்தும். 
வளைகுடா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுகிறது. குறிப்பாக எகிப்து, லிபியாவில் புரட்சி ஏற்பட்டுள்ளது. லிபியாவில் சிக்கிக் கொண்ட 16 ஆயிரம் இந்தியர்களை அவசரமாக வெளியேற்றும் பணியை இந்தியா மேற்கொண்டது. இதுபோன்ற அபாய காலங்களில் உதவ இந்தியா தயாராக இருக்கிறது. இதுபோன்ற காலங்களில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.