இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜூன் 29

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் பள்ளிவாசல் தெரு  ஜனாப்.முஹம்மது இப்ராஹிம் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தானார்..முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசலின் முன்னால் மோதினார் (பிலால்) என்பது குறிப்பிடத்தக்கது.

 "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

 அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

வியாழன், ஜூன் 26

துபாய்: ஈமான் அமைப்பின் உதவியுடன் தமிழக இளைஞர் உடலுக்கு இறுதிச் சடங்கு.

துபாய் ஈமான் அமைப்பின் உதவியுடன் தமிழக இளைஞர் பாஸ்கரன் உடலுக்கு இறுதிச் சடங்கு நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை காலை ஜெபல் அலி மயானத்தில் நடைபெற்றது.


துபாயில் உள்ள அக்குரோ ஸ்பெஷலிஸ்ட் நிறுவனத்தில் தொழிலாளராக பணிபுரிய குடவாசல் வட்டம் பெருந்தரக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் கடந்த ஆண்டு அங்கு சென்றார். சில மாதங்கள் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு பின்னர் அந்நிறுவனத்திற்கு தெரியாமல் வெளியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 29.04.2014 அன்று எதிர்பாராத வகையில் மரணமடைந்து விட்டார். இத்தகவல் அவரது மனைவி ஜெயபிரதாவுக்கு அக்குரோ நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர் சபீர் மூலம் தெரிவிக்கப்பட்டது. கடந்த 02.06.2010 ஆம் ஆண்டு பாஸ்கரனுக்கும், ஜெயபிரதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை.



இதனையடுத்து துபாய் ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் ஆகியோர் இறுதிச் சடங்கினை துபாயிலேயே ஏற்பாடு செய்ய பாஸ்கரன் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து பாஸ்கரன் பணிபுரிந்து வந்த நிறுவனம் அவர் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும் மனிதாபிமான அடிப்படையில் அந்நிறுவனத்தின் சபீர் உள்ளிட்ட ஊழியர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்று அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டனர். இறுதிச் சடங்கு இந்து முறைப்படி நடைபெற்றது. துபாய் இந்திய துணைத் தூதரகம் இதற்கான அனைத்து உதவிகளையும் செய்திருந்தது.

Read more at: http://tamil.oneindia.in/news/international/dubai-iman-sponsured-money-tamilian-s-funeral-204438.html

திங்கள், ஜூன் 23

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் பள்ளிவாசல் தெரு  ஜனாப்.இமாம் அலி அவர்களின் தாயார் ரம்ஜான் பீவி அவர்கள் இன்று வஃபாத்தானார்..

 "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

 அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

ஞாயிறு, ஜூன் 22

கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே...!

தொடங்கியாச்சு... உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்வையும், உடலுக்குள் வறட்சியும் என நம்மை வாட்டி வதைத்து விடும். இதில் முக்கியமாக தொண்டை வறட்சி... குளிராக எது கிடைத்தாலும் குடித்துவிடுவோம். கோடைகாலத்தில் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் வைத்து விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக, அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்.


இந்த கலரான குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரிதான் சேருமே தவிர, வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் டாக்டர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவையும் அமோகமாக விற்பனையாகின்றன. இவற்றை தவிர்ப்பதும் நல்லது.

எண்ணெயில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்ப்பதுதான் நல்லது.

வெளியில் சென்றால் கையோடு ஒரு பாட்டிலில் சுத்தமான குடிநீரை எடுத்து செல்லுங்கள். இல்லையென்றால், இயற்கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள்.

மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லதுதான். அதேநேரம், அவற்றில் சேர்க்கப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்தவரை, அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வதுதான் சிறந்தது.
நன்றி : Koodal.com

வியாழன், ஜூன் 19

தபால்நிலையங்களில் இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்.

ஜூலை மாதம் வந்தால், சென்னை வாசிகள் தபால் நிலையங்களிலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நல்வசதி கிடைக்கும்.

இதற்காக தபால் துறையும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு எப்படி இச்சேவை சுமுகமாக்குவது என திட்டங்களை வகுத்து வருகிறது. மேலும், எந்தெந்த தபால் நிலையங்களில் இந்த சேவையை அளிக்கலா என்று ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.


இது குறித்து தபால் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்: "பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டி வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள ஊழியர்களிடம் விண்ணப்ப படிவத்தை பெற்று விபரங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் அதிலிருக்கும் தகவல்களை ஊழியர் ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்வார். விண்ணப்பதாரர்கள், தங்கள் வயதுச் சான்று, இருப்பிடச் சான்று போன்ற ஆவணங்களை எடுத்துச் செல்வது அவசியம். தபால் ஊழியர்களுக்கு, விண்ணப்பங்களை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் விண்ணப்பதாரருக்கு அதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் பாஸ்போர்ட் மையங்களில் நடைபெறும் நேர்காணலுக்கான தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.

முதற்கட்டமாக இத்திட்டம், சென்னை, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் மொத்தம் 25 தபால் அலுவலகங்களில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் குறிப்பாக 10 தபால் நிலையங்களில் இந்த சேவை வழங்கப்படவுள்ளதாகவும். மக்கள் வரவேற்பை பொறுத்து படிப்படியாக இச்சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தபால் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

கட்டண விபரம்:

தபால்நிலையங்களில், பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வாடிக்கையாளர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் சேவையைப் பெற இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கட்டணத்தை ஆன்லைனிலும் செலுத்தலாம் இல்லையெனில் பாரத ஸ்டேட் வங்கி மூலமும் செலுத்தலாம் என போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் அலெக்சாண்டர் தெரிவித்தார்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பதிவு செய்யும் பணியை மட்டுமே தபால்துறை ஊழியர்கள் செய்வார்கள் என்றும் விண்ணப்பதாரர் விபரங்களை சரிபார்க்கும் பணியை தபால்துறை மேற்கொள்ளாது என்றும் அவர் கூறினார்.

மேலும் தபால் ஊழியர்கள் பல விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யு எதுவாக அவர்களுக்கு பிரத்யேக கணினி பயன்பாட்டு பெயர் மற்றும் ஐ.டி. வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Thanks To : http://tamil.thehindu.com/

ஏலக்காயில் இவ்ளோ இருக்கா?

வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை...
Cardamom as a Medicine - Home Remedies - Food Habits and Nutrition Guide in Tamil

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

Courtesy : Koodal.Com

புதன், ஜூன் 18

துபாய் ஈமான் அமைப்பின் முயற்சியால் மனநலம் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பத்துடன் சேர்ப்பு.

துபாய்: துபாய் மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டம் வி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் பெரியசாமி 14.06.2014 அன்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.



அதன் விவரம் வருமாறு,

துபாய் மருத்துவமனையில் மனநலம் பாதிப்பட்ட இந்தியர் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய கன்சுலேட்டின் தகவலையடுத்து ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஏ முஹம்மது தாஹா மருத்துவமனைக்கு விரைந்தார். மருத்துவமனையில் சுப்ரமணியன் பெரியசாமியின் நிலைமையினை உணர்ந்து அவரிடம் இருந்த அலைபேசியை சோதனையிட்டதில் அவரது மனைவியின் தொடர்பு எண் கிடைத்து அவரிடம் தொடர்பு கொண்டார். பின்னர் அவரது மகன் சரவணன் சென்னையில் இருப்பதாகவும் அவரின் தொடர்பு எண்ணையும் அவர் கொடுத்தார். அவரது மகனிடம் விபரத்தைக் கூறினார். கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக தங்களது தந்தை எங்கே இருக்கிறார் எனத் தெரியாமல் இருந்தோம்.

தங்களது தகவலையடுத்து அவர் துபாய் மருத்துமனையில் இருப்பதை தெரிந்து கொண்டோம் என்றார். அவரை தாயகத்திற்கு அழைத்து வருவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டுகோள் விடுத்தார்.



பின்னர் இந்திய கன்சுலேட், இந்திய சமூக நல மையம் ஆகியவற்றின் உதவியுடன் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா ஆகியோர் சுப்ரமணியனை அவரது மகன் சரவணனிடன் ஒப்படைத்தனர். சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக எவ்வித தகவலும் இல்லாமல் இருந்த சுப்பிரமணியனை அழைத்து வந்து ஒப்படைத்த துபாய் இந்திய கன்சுலேட், இந்திய சமூக நல மையம் மற்றும் ஈமான் அமைப்பினருக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

இமான் அமைப்பிற்கு மனம் மார்ந்த பாராட்டுகளையும் இது போன்று நற்சேவைகள் தொடர வாழ்த்துகிறது திருப்பனந்தாள் ஜமாஅத்.

Courtesy : http://tamil.oneindia.in/news/international/a-tn-based-family-thanks-dubai-iman-organization-203760.html

திங்கள், ஜூன் 16

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

நமது ஊர் பள்ளிவாசல் தெரு ஹாஜி ஜனாப். MKD ஹாஜா மைதீன் இன்று வஃபாத்தானார்.

திருப்பனந்தாள் ஜமாதுல் இஸ்லாமிய UAE முன்னாள் தலைவர் ஹாஜி ஜனாப். ஹாஜா மைதீன் இன்று வஃபாத்தானார்.

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்".

அன்னாரது மறைவுக்கு திருப்பனந்தாள் ஜமாதுல் இஸ்லாமிய UAE அமைப்பு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

வியாழன், ஜூன் 12

OMAN RECRUITMENT.

Candidates for our Client in Oman for Tawoos/Renaissance,

Renaissance is one of the largest companies in oman with work force of 6000+pus employees and are operating in 16 countries started in the year 1983.Renaissance/Tawoos is multi business conglomerate.The below requirement is for their facilty Management Product.



SL NO
DESCRIPTION
SALARY RO
ACCOMADATION
FOOD
Eligibility Criteria
indian INR PER MONTH
1
Maintenance supervisor
300
FREE
FREE
Diploma in Mechanical/ Electrical Engineering with 4-6 years exp with mini 2 years as Supervisor In Repair & Maintenance ,Exposure to Civil & Carpentry Work Will Be an Advantage
46800
2
Maintenance foreman
225
FREE
FREE
I.T.I  in mechanical/Electrical Trade with 4-6 years exp in Repair & maintenance of various eletro -mechanical Equipment, civil ,carpenter and plumbing work,must be able to lead a team of carpenter ,masons, painter, plumber etc
35100
3
A/C Technician
180
FREE
FREE
i.t.i / Certificate Course in Air Conditioning with 4-6 years exp of window & spilit AC,chest cooler,freezers etc
28080
4
plumber
150
FREE
FREE
I.T.I /Certificate Course in plumbing with 4-9 exp
23400
5
STP OPERATOR
180
FREE
FREE
STP OPERATOR EXP-4-6 EXP , EXP IN  Operates sewage treatment, sludge processing, and disposal equipment in waste water treatment plant to control flow and processing of sewage: Monitors control panels and adjusts valves and gates manually     or by remote control to regulate flow of sewage.
 
28080
6
Technical Clerk
225
FREE
FREE
2-6 Exp as Technical cleark in Stores
35100
7
carpenter
150
FREE
FREE
I.T.I/ Certificate course of in Carpentry 4-6 yrs Repair & maintenance of carpentry machine
23550
8
Appliance Technician
180
FREE
FREE
I.T.I / Certificate course in Electrical / Wire man trade with 4-6 yrs exp in Electrical Appliance and Equipment in catering / hotel
28080

To Apply reply to this email id with the following (Email: gulfservicemaa@gmail.com)

1.Resume

2.Education Certificate.

3.Passport Copy Front and Back

4.Experience certificates

5.Passport Size Photo

Walk In Client Interview on 15 TH JUNE –2014

Place: Chennai (Address will be convey with mobile)


MODE OF INTERVIEW : PRESCREENING FOR CLIENT INTERVIEW

Tenantive Joining Date ; ASAP

FOR MORE DETAILS CALL : 8124449023/ 9444751757

Regards,

Arul. G & Faiz Ahmed A S

Jetway Enterprises,

No.: 19/1, Thiru Vengadam Street, Near Golden Tower Hotel, Periyamet, Chennai – 600 003.

Ph: 044 - 3310 7161; +91 8124449023; +91 9444751757;

Mail your resume to: gulfservicemaa@gmail.com; jetwayenterprises@gmail.com;

For latest openings please visit our website: www.gulfservicemaa.webs.com Or: http://groups.google.com/group/gulfservicemaa

Fwd from Mr.Ismail - DxB.

கல்வி உதவித் தொகை :

தகுதி மற்றும் வருமானம் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தற்போது தனியாக இணையதளம் துவக்கப்பட்டு, ஆன்லைனிலேயே மாணவர்கள் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.


மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள www.momascholarship.gov.in இணையதளத்தைப் பார்க்கவும்.


Scholarship : பள்ளி மாணவர்களுக்கான உதவித் தொகை
Course :
Provider Address :
Description : 

News From : Dinamalar.com




ஞாயிறு, ஜூன் 8

வெயிலைத் தாக்குப் பிடிக்க.....!

உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.
Home Remedies for Summer Heat - Food Habits and Nutrition Guide in Tamil

குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.

வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.

கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.

முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும்.

இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதை விட உப்பு சேர்த்து மோராக சாப்பிடுவதும் நல்லது.

Courtesy : Koodal.Com

சனி, ஜூன் 7

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அஸ்ஸலாமு அலைக்கும்.


நமது ஊர் பள்ளிவாசல் தெரு  ஜனாப்.இமாம் அலி அவர்களின் சகோதரர் ஜனாப்.ஜாகிர் ஹுசைன் அவர்கள் நேற்று இரவு வ‌ஃபாத்தானார்..

 "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

 அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

வெள்ளி, ஜூன் 6

திருப்பனந்தாளில் முதல் முன்று இடம் பெற்ற மாணவ / மாணவிகளின் விவரம்.


தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் முதல் முன்று இடம் பெற்ற மாணவ / மாணவிகளின் விவரம்:

                 பனிரெண்டாம் வகுப்பு மாணவ / மாணவிகள் :

1
மாணவி பெயர்
M.THOWHEEDHIYA
.பெயர்         
MR.MOHAMED RAFEEK
தெரு
காயிதே மில்லத் தெரு
பள்ளி           
SKGM MAT.HR.SEC SCHOOL
மதிப்பெண்
980 / 1200
வருடம்          
2014
வகுப்பு          
12 th
ஊர்
திருப்பனந்தாள்
மாவட்டம்      
தஞ்சாவூர்
2
மாணவர் பெயர்
K.YASAR ARAFATH
.பெயர்         
MR.A.KISMATH BATCHA
தெரு
நடுத்தெரு
பள்ளி           
TOWN HR SEC SCHOOL
மதிப்பெண்
912 / 1200
வருடம்         
2014
வகுப்பு          
12 th
ஊர்
திருப்பனந்தாள்
மாவட்டம்      
தஞ்சாவூர்
3
மாணவர் பெயர்
M..MOHAMED IFTHIHAR
.பெயர்         
MR.M.MOHAMED ANSARI
தெரு
மதினா தெரு
பள்ளி           
RICE CITY SCHOOL
மதிப்பெண்
707 / 1200
வருடம்         
2014
வகுப்பு          
12 th
ஊர்
திருப்பனந்தாள்
மாவட்டம்      
தஞ்சாவூர்
பத்தாம் வகுப்பு மாணவ / மாணவிகள் :
1
மாணவி பெயர்
K.ROSAN FATHIMA
.பெயர்         
MR.KISMATH BATCHA
தெரு
பள்ளிவாசல் தெரு
பள்ளி           
CHRIST THE KING MAT.HR.SEC SCHOOL
மதிப்பெண்
465 / 500
வருடம்          
2014
வகுப்பு          
10 th
ஊர்
திருப்பனந்தாள்
மாவட்டம்      
தஞ்சாவூர்
2
மாணவி பெயர்
K.JAMALUDEEN
.பெயர்         
MR.KISMATH BATCHA
தெரு
பள்ளிவாசல் தெரு
பள்ளி           
CHRIST THE KING MAT.HR.SEC SCHOOL
மதிப்பெண்
449 / 500
வருடம்         
2014
வகுப்பு          
10 th
ஊர்
திருப்பனந்தாள்
மாவட்டம்      
தஞ்சாவூர்
3
மாணவி பெயர்
B.MOHAMED BASITH
.பெயர்         
MR.K.S.V.BASHEER AHAMED
தெரு
ரஹ்மத் தெரு
பள்ளி           
RICE CITY HR.SEC SCHOOL
மதிப்பெண்
383 / 500
வருடம்         
2014
வகுப்பு          
10 th
ஊர்
திருப்பனந்தாள்
மாவட்டம்      
தஞ்சாவூர்

மதிப்பெண் பெற்ற மாணவ / மாணவிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறது திருப்பனந்தாள் ஜமாஅத்,திருப்பனந்தாள் ஜமாதுல் இஸ்லாமிய UAE & IYWA - TPL .

Thanks To : IYWA & TEAM For Collecting this Details.