இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், டிசம்பர் 20

உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்..
 Hats Off Iman Uae Kaithe Millath Peravai
துபாய்: துபாய் ஈமான் அமைப்பு மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவையின் உதவியால் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட தந்தையை சந்தித்த மகன் அவரது கரங்களை வருடி வாஞ்சையுடன் வரவேற்ற காட்சி சென்னை விமான நிலையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
இதன் விபரம் வருமாறு,
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (73). 1976ம் ஆண்டு துபாய்க்கு வேலை தேடி சென்றார். இவரது மனைவியும், மூன்று மகன்களும் திருநெல்வேலியிலேயே இருந்தனர். துபாயில் கஷ்டப்பட்டு வேலை பார்த்த ராஜகோபால் பல ஆண்டுகளுக்குப் பிறகு 1984ல் திருநெல்வேலிக்கு வந்தார். ஒரு சில மாதங்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் துபாய்க்கு சென்றுவிட்டார். அதன் பிறகு ஊர் திரும்பவில்லை. துபாயில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டார். இதனால் முதல் மனைவி மற்றும் மகன்களுடன் தொடர்பு இல்லாமல் போனது. எப்போதாவது பணம் மட்டும் அனுப்புவார். 
இந்நிலையில் இரண்டாவது மனைவியுடனான தொடர்பும் இல்லாமல் போனது. மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இருதய பாதிப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக துபாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரைப் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்காததால் மருத்துவமனை நிர்வாகத்தினர் இந்திய தூதரகத்ததின் உதவியை நாடினர். எனினும் அவரது குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 
இந்திய தூதரக அதிகாரிகள் ஈமான் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து ராஜகோபாலை அவரது குடும்பத்தினருடன் சேர்ப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஈமான் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஈமான் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் மருத்துவமனை சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் அவரைப் பற்றிய விபரங்களை கேட்டுக்கொண்டு புகைப்படத்துடன் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிட்டனர். 
இதனைப் பார்த்த முதல் மனைவி தனது மூத்த மகன் சுந்தர்ராஜனிடன் தெரிவித்து தந்தையை கொண்டுவர ஏற்பாடு செய்திட கேட்டுக் கொண்டார். சுந்தர்ராஜன் துபாய் ஈமான் அமைப்பினரை தொடர்பு கொண்டு தனது தந்தையினை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்திடுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி இந்திய தூதரகத்தின் முழு ஒத்துழைப்புடன் கடந்த 16.12.2012 அன்று மாலை ஏர் இந்தியா விமானத்தில் துபாயில் இருந்து புறப்பட்டு 17.12.2012 அன்று காலை அவரது மகன் சுந்தர்ராஜனிடம் அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, முதுவை ஹிதாயத் ஆகியோர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ராஜகோபாலை ஒப்படைத்தனர். தந்தையை பெற்றுக் கொண்ட சுந்தர்ராஜன் மிகவும் நெகிழ்ச்சியுடன் இப்பணியில் மிகவும் ஒத்துழைப்பு நல்கிய துபாய் இந்திய தூதரகம், ஈமான் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவையினருக்கும், ஊடகங்களுக்கும் தனது குடும்பத்தினரின் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு விடைபெற்றார். 
இந்நிகழ்வில் 'நகைச்சுவை பேரரசு' தேவகோட்டை ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
.
ஜனாப்.முஹமது தாஹா அவர்களையும் மற்றும் முதுகளத்தூர் ஹிதாயத் அவர்களையும்  பாராட்டி மகிழ்கிறது திருப்பனந்தாள் ஜமாத்தார்கள் மற்றும் நண்பர்கள்..
உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம். 
நன்றி : தினமலர் , முதுகளத்தூர்.காம் & thatstamil.com

புதன், டிசம்பர் 19

வரலாற்றில் இன்று.



  • 1154- இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றி முடிசூடினான்.
    1606 - ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.
    1871 - யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் (ordination) வழங்கப்பட்டன.
    1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஜேர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.
    1932 - பிபிசி எனப்படும் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம் முதன் முதலில் வெளிநாடு ஒன்றுக்கு ஒலிபரப்பத் தொடங்கியது. Empire Service என்ற அந்தச் சேவையைப் பெற்ற நாடு ஆஸ்த்திரேலியா.
    1941 - அடொல்ஃப் ஹிட்லர் ஜேர்மனிய இராணுவத் தலைவர் ஆனார்.
    1961 - போர்த்துகீச குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
    1963 - சன்சிபார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சுல்தான் ஹமூட் பின் முகமது தலைமையில் முடியாட்சியைப் பெற்றது.
    1972 - சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.
    1983 - உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.
    1984 - ஹொங்கொங்கின் ஆட்சியை ஜூலை 1, 1997 இல் மக்கள் சீனக் குடியரசிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டெங் க்ஸியாவோபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.
    1986 - சோவியத் எதிர்ப்பாளி அந்திரேய் சாகரொவ் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
    1997 - ஆங்கிலத் திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய Titanic திரைப்படம் முதன் முதலில் திரையிடப்பட்டது.
    2000 - யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டன

தமிழக KFC ஹலால் இல்லையாம்..தெரியுமா உங்களுக்கு!?!

கல்வி மற்றும் தொழில் நிமித்தமாக நம்மில் பலர் வெளியூர்களில் வசிப்பதுண்டு. குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் அதிகம் வசித்துவருகின்றனர். தாமாகவே சமைத்துக்கொள்வதென்பது நம்ம ஊரு நாக்கு ருசிக்கு ஒத்துவருமோ இல்லையோ ஆனால் வேலை/படிப்பு போக நமக்கு கிடைக்கும் எஞ்சிய நேரம்,காலத்தின்படி சமைக்க ஒத்துவருவதில்லை.முக்கியமாக திருமணம் ஆன/ஆகாத பிரம்மச்சாரிகளுக்கு இது பொருந்தும்.



சென்னை போன்ற நகரங்களில் வார விடுமுறை என்றால் ஒன்று போர்வை போர்த்திக்கொண்டு நாள் முழுதும் தூங்குவதுண்டு அல்லது இரு சக்கரங்களில் ஒரு சக்கரம் மட்டும் தரையை தொட்டவாறு கடற்கை பக்கம் இருக்கும் சிட்டி சென்டருக்கோ, எக்ஸ்பிரஸ் அவனியூவிற்கோ, ஸ்பென்சர் பிளாசா போன்ற அங்காடிகளுக்கு நண்பர்கள் அல்லது குடும்பத்தாருடன் செல்வதுண்டு. அதிக மக்கள் மாலை நேரத்தில் இங்கு செல்வதால் இரவு உணவை நாலு மாடி ஏறி இறங்கின களைப்பில் கோழிக்கால்களை தேடி கால்கள் KFC போன்ற துரித உணவகம் பக்கம் பறக்க பறக்க செல்லும். ஹலால் என்ற பச்சை (பொய்) எழுத்தில் எழுதி தாயத்து தகடு போல் ஒரு ஃபத்வாவை ஒரு ஓரத்தில் ஃபிரேம் மாட்டி வைத்து ஹலால் என்று நிரூபிருத்திருப்பார்கள்.

இதைக்கண்டு இத்தனைநாள் நாம் ஏமார்ந்து போகிருக்கின்றோம் என்பதை அறிந்துக்கொள்ள கீழே உள்ள உரையாடலை கேட்டு பயன்பெறுங்கள். முடிந்தவரை பிறருக்கும் பரப்புங்கள்.



இதேபோல் மேலும் எத்தனை நிறுவனங்கள் நம்மை ஏமாற்றுகின்றதென்று தெரியவில்லை. இதனை வைத்து பார்க்கும்பொழுது சுகுணா கோழியை வாங்குவதிலும் நாம் ஒரு கண்ணு வைத்திருக்கனும் போலிருக்கு .

கோழியை விற்க ஈமானையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரிய செய்திதான்..

ஞாயிறு, டிசம்பர் 16

வரலாற்றில் இன்று.


1431 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.
1497 - வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.
1598 - கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது.
1653 - சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார்.
1707 - ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.
1773 - அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.
1920 - மிக மோசமான நில நடுக்கங்களுள் ஒன்று சீனாவின் கான்ஸீ மாநிலத்தைத் தாக்கியது, ரிக்டர் அளவுகோளில் எட்டாக பதிவான இயற்கைப் பேரிடரில் சுமார் 200 ஆயிரம் பேர் மடிந்தனர்.
1925 - இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.
1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.
1971 - பாஹ்ரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1991 - கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது
2000 - ஜூபிடர் கோளைச் சுற்றும் Ganymede என்ற நிலாவில் ஐஸ் மேற்பரப்பின் கீழ் திரவ உப்புநீர்க்கடல் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்தன

நிலாவில் காய்கறித் தோட்டம் அமைக்க சீனா திட்டம்.

விண்வெளியில் காய்கறித் தோட்டம் அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ளும் வீரர்கள் இனி உணவுக்காக திண்டாட தேவையிருக்காது என்று வெற்றிகரமான ஆய்வுக்கூட சோதனைக்கு பின்னர், ஒரு சீன உயர் அதிகாரி கூறியுள்ளார்.

சீனா விஞ்ஞானிகள் வருங்காலத்தில், நிலவிலோ அல்லது செவ்வாய் கிரகத்தில்லோ காய்கறித்தோட்டம் அமைக்க உள்ளனர். இதற்காக ஒரு மூடிய அமைப்பில் மக்கள் மற்றும் தாவரங்களுக்கு இடையேயான ஒரு டைனமிக் சமச்சீர் ஆக்சிஜன் நுட்பம், கார்பன் டை ஆக்சைடு, நீர் மீது கவனம் செலுத்தி நடந்து வருவதாக டெங் யிபிங் என்ற சீன விண்வெளி வீரர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் துணை இயக்குனர் கூறினார்.

இச்சோதனையில், நான்கு வகையான காய்கறிகள் வளர்க்கப்பட்டது. அவை, மனிதர்கள் வெளியிடும் கரியமிலத்தை எடுத்து கொண்டு, அந்த அறையில் வாழும் இரண்டு பேருக்கு ஆக்சிஜன் வழங்கியது. அவ்வாறே அச்செடிகள் தொடர்ந்து வளர்ந்ததாகவும், பின்னர் அதை அவர்கள் உணவுக்கு காய்கறிகளாக கூட பயன்படுத்தும் வாய்ப்பும் இருந்ததாக டெங் கூறினார்.

டெங்கின் கூற்று படி, இது தொடர்பான சோதனையின் போது ஒரு 300 கன மீட்டர் மூடிய அறையில் இரண்டு பங்கேற்பாளர்களுக்கு காற்று, தண்ணீர் மற்றும் உணவு நிலையான விநியோகம் கிடைத்ததாக உறுதி செய்யப்பட்டது. சீனாவில் இவ்வகையில் முதன் முதலாக நடந்த சோதனை இது தான் என்றும், இது அந்நாட்டின் விண்வெளி திட்டத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியதத்துவம் வாய்ந்தது என்று டெங் கூறினார். கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் வாழ்க்கை ஆதரவு அமைப்பு (CELSS) எனப்படும் இந்த அறை போன்ற அமைப்பு 2011-இல் கட்டப்பட்டது.

இது சீன விண்வெளி வீரர்கள் வாழ்க்கை ஆதரவு அமைப்புகளில், மூன்றாவது தலைமுறை மாதிரியாக திகழ்கிறது. வருங்காலத்தில், இத்திட்டம் நிலவிலோ அல்லது செவ்வாய் கிரகத்தில்லோ அமல்படுத்தபடும் என தெரிகிறது. சீனர்கள் மட்டுமல்லாது, இச்சோதனைகளில், ஜெர்மனி நாட்டு விஞ்ஞானிகளும் இனைந்து பங்கேற்றனர். CELSS தொழில்நுட்பத்தின் அறிமுகம், தாவரங்கள் மற்றும் பாசிகளின் உதவியுடன் விண்வெளியில் காற்று, தண்ணீர் மற்றும் உணவின் நிலையான விநியோகம் கிடைக்க வழிவகை செய்கிறது.

இப்போதுள்ள தொழில்நுட்பங்கள் படி, 6 மாதங்களுக்கு மேல் விண்வெளியில் தாங்க கூடிய உணவு பொருட்களை உருவாக்குவதில் மிகுந்த சிரமங்கள் இருந்தன. இக்காரணத்தினால் தான், விண்வெளியில் நீண்ட கால ஆராய்ச்சிகளை விண்வெளி வீரர்களால் மேற்கொள்ள முடியாமல் இருந்தது. இந்த CELSS-ன் கண்டுபிடிப்பு மனிதகுலத்திற்கு ஒரு பெரிய வரமாக மாறக்கூடும். இந்த தொழில்நுட்பம் சரியாக இயங்க துவங்கினால், வருடக்கணக்கில் நீளும் விண்வெளி பயணங்களை கூட நமது விண்வெளி வீரர்கள் மேற்கொள்ள முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

செவ்வாய், டிசம்பர் 4

அமீரகத்தின் 41 ஆம் தேசிய தினம்..

துபை ஈமான் அமைப்பின் 37 ஆம் ஆண்டு விழா அமீரகத்தின் 41 ஆம் தேசிய தினமான 02 டிசம்பர் 2012 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை ஷார்ஜா ரயான் ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அமீரகத்தின் 41 ஆம் தேசிய தினமான 02 டிசம்பர் 2012, திருப்பனந்தாள் மக்கள் கோலாகல கொண்டாட்டம்...








திங்கள், டிசம்பர் 3

துபாயில் கனமழை..

துபாய் : துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும்  30.11.2012 வெள்ளிக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. எனினும் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் வெளியில் சென்று களிக்க திட்டமிட்டவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் துபாயில் கனமழை பெய்து வருவது மக்களுக்கு மகிழ்வை அளித்து வருகிறது.