இந்த வலைப்பதிவில் தேடு

புதன், பிப்ரவரி 12

TNPSC GROUP 2-A - 2,269 காலியிடங்கள்

அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,269 உதவியாளர், நேர்முக எழுத்தர் பணியிடங்களை நிரப்ப மே மாதம் 18-ம் தேதி குரூப்-2-ஏ தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) அறிவித்துள்ளது.



நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர்,
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட தமிழக அரசின் சார்நிலைப் பணிகளில் நேர்காணல் உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வும் நேர்காணல் இல்லாத பணியிடங்களை (உதவி யாளர்) நிரப்புவதற்கு குரூப்-2-ஏ தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.

அந்த வகை யில், பத்திரப் பதிவுத்துறை, போக்குவரத்துத்துறை, காவல் மற்றும் சிறைத்துறை, பள்ளிக் கல்வித் துறை உள்பட பல்வேறு துறைகளில் உதவியாளர் மற்றும் நேர்முக எழுத்தர் பதவிகளில் " 2,269 காலியிடங்களை" நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வெழுத விரும்புவோர் டி.என்.பி.எஸ்.சி. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 5-ம் தேதி ஆகும். விண்ணப்பிக்கும்முறை, தேர்வுக்கட்டணம், பாடத் திட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

http://www.tnpsc.gov.in/notifications/1_2014_not_eng_ccse_II_non_ot_Grp_II_A.pdf

Special Thanks to :Mr.Mohamed Faizur Rahman.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக