சென்னை: போலியோ சொட்டு மருத்து அளிக்க தமிழகம் முழுவதும் 240 மையங்களை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது.

போலியோ நோயை தடுக்க ஆண்டுத்தோறும் போலியோ சொட்டு மருத்து நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படுகின்றது. இதற்காக பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், கடைத் தெருக்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மையங்கள் அமைக்கப்படுகின்றது.
மருத்துவ பணியாளர்கள், தனியார் தொழிற்சாலை பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவர்கள் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் உட்பட பலத் தரப்பு மக்கள் சொட்டு மருத்து அளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை(19.2.2012) போலியோ சொட்டு மருத்து அளிக்கப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றது. ரயில் நிலையங்களில் வருவோரின் குழந்தைகளுக்கு இச்சேவை கிடைக்கும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில் தமிழகம் முழுவதும் 240 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக ரயில்வே ஊழியர்கள் அடங்கிய குழுவை தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் விஜயகுமார் நியமித்துள்ளார்.
முக்கிய ரயில் நிலையங்கள், ரயில்வே காலனிகள், ரயில்வே மருத்துவமனைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
போலியோ நோயை தடுக்க ஆண்டுத்தோறும் போலியோ சொட்டு மருத்து நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படுகின்றது. இதற்காக பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், கடைத் தெருக்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மையங்கள் அமைக்கப்படுகின்றது.
மருத்துவ பணியாளர்கள், தனியார் தொழிற்சாலை பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவர்கள் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் உட்பட பலத் தரப்பு மக்கள் சொட்டு மருத்து அளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை(19.2.2012) போலியோ சொட்டு மருத்து அளிக்கப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றது. ரயில் நிலையங்களில் வருவோரின் குழந்தைகளுக்கு இச்சேவை கிடைக்கும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில் தமிழகம் முழுவதும் 240 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக ரயில்வே ஊழியர்கள் அடங்கிய குழுவை தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் விஜயகுமார் நியமித்துள்ளார்.
முக்கிய ரயில் நிலையங்கள், ரயில்வே காலனிகள், ரயில்வே மருத்துவமனைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக