இந்த வலைப்பதிவில் தேடு

புதன், பிப்ரவரி 29

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தில் த‌மிழ‌றிஞ‌ருக்கு வ‌ர‌வேற்பு.

துபாய் : துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் சார்பில் த‌மிழ‌றிஞ‌ருக்கு 28.02.2012 செவ்வாய்க்கிழ‌மை மாலை வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தில் தாய‌க‌த்திலிருந்து வ‌ருகை புரிந்த‌ கும்ப‌கோண‌ம் அர‌சு க‌லைக்க‌ல்லூரியின் ஓய்வு பெற்ற‌ த‌மிழ்த்துறை பேராசிரிய‌ரும், ப‌ட்டிம‌ன்ற‌ பேச்சாள‌ருமான‌ பொன். முத்தைய‌னுக்கு வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

த‌மிழ‌க‌த்தின் புரதான‌ச்சின்ன‌ங்க‌ள், ச‌மூக‌ ந‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு விஷ‌ய‌ங்க‌ள் குறித்து விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. ச‌மூக‌ ந‌ல்லிண‌க்கத்தின் அவசிய‌ம் குறித்தும், இன்றைய‌ சூழ‌லில் அனைவ‌ரும் இணைந்து செய‌ல்ப‌ட‌ வேண்டிய‌து உள்ளிட்ட‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. மேலும் அமீர‌க‌த்தில் துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் மேற்கொண்டு வ‌ரும் ப‌ணிக‌ள் குறித்து பொன்.முத்தைய‌ன் பாராட்டு தெரிவித்தார்.

நிக‌ழ்வில் துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ நிறுவ‌ன‌ புர‌வ‌ல‌ர்க‌ள் ஏ. லியாக்க‌த் அலி, ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ப‌த்திரிகையாள‌ர் முதுவை ஹிதாய‌த் உள்ளிட்டோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக