ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவையும், மண்டபத்தையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கடல்மேல் சுமார் 2.13 கிலோமீட்டர் தூரம் பாலம் அமைக்கப்பட்டது. பாம்பன் ரெயில் பாலத்தில் 1914–ம் ஆண்டு பிப்ரவரி 24–ந்தேதி ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.


100 ஆண்டுகள் ஆனதையொட்டி இதனை சிறப்பிக்கும் வகையில் இந்திய ரெயில்வே அமைச்சகம், ரெயில்வே வாரியம் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே நிர்வாக பொது மேலாளர் ராஜேஸ்மிஸ்ரா, கூடுதல் பொதுமேலாளர் நாராயணன், மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி ஆகியோர் செய்து வந்தனர்.

100 ஆண்டுகள் ஆனதையொட்டி இதனை சிறப்பிக்கும் வகையில் இந்திய ரெயில்வே அமைச்சகம், ரெயில்வே வாரியம் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே நிர்வாக பொது மேலாளர் ராஜேஸ்மிஸ்ரா, கூடுதல் பொதுமேலாளர் நாராயணன், மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி ஆகியோர் செய்து வந்தனர்.
பாம்பன் ரெயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தொடக்க விழா இன்று பாம்பன் ரெயில் நிலையம் அருகே நடைபெற்றது. விழாவுக்கு மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி தலைமை தாங்கினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சுந்தரபாண்டியன், பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக், மண்டபம் பேரூராட்சி தலைவர் தங்கமரைக்காயர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சுந்தரபாண்டியன், பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக், மண்டபம் பேரூராட்சி தலைவர் தங்கமரைக்காயர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாம்பன் ரெயில் பால நூற்றாண்டு விழாவையொட்டி அங்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மின்விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும் தூக்கு பாலத்தை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர்.
இந்த விழாவில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று காலை மதுரையில் இருந்து குண்டு துளைக்காத காரில் ராமநாதபுரம் வந்தார்.
பின்னர் அவர் மண்டபத்தில் இருந்து பாம்பன் பாலத்துக்கு சிறப்பு ரெயிலில் சென்றார். அவருடன் ரெயில்வே அதிகாரிகள் உடன் சென்றனர். பின்னர் அப்துல்கலாம் பாம்பன் பாலத்தின் அழகை கண்டு ரசித்தார்.
இந்த விழாவில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று காலை மதுரையில் இருந்து குண்டு துளைக்காத காரில் ராமநாதபுரம் வந்தார்.
பின்னர் அவர் மண்டபத்தில் இருந்து பாம்பன் பாலத்துக்கு சிறப்பு ரெயிலில் சென்றார். அவருடன் ரெயில்வே அதிகாரிகள் உடன் சென்றனர். பின்னர் அப்துல்கலாம் பாம்பன் பாலத்தின் அழகை கண்டு ரசித்தார்.
நன்றி : மாலைமலர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக