மும்பை: கிரிக்கெட்டில் விறுவிறுப்பை அதிகரிக்க, 7 ஓவர்கள் கொண்ட "செவன் ஸ்டார் லீக்' தொடர் விரைவில் அரங்கேற உள்ளது.
மந்தமான டெஸ்ட் போட்டிகளால் வெறுத்துப் போன ரசிகர்களுக்கு ஒருநாள் (50 ஓவர்) போட்டி உற்சாகம் தந்தது. பின் அதிரடியான "டுவென்டி–20' போட்டி பெரும் வரவேற்பை பெற்றது.

தூதுவர் தோனி:
இந்த வரிசையில், 7 ஓவர்கள் கொண்ட புதுமையான "செவன் ஸ்டார்' லீக் தொடர் துபாயில் நடக்க உள்ளது. இதற்கு ஐ.சி.சி., இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதி அளித்துள்ளன. இதன் துாதராக இந்திய கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மார்ச் மாதம் இத்தொடர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனை அணிகள்:
ஐக்கிய அரபு .எமிரேட்சை (யு.ஏ.இ.,) சேர்ந்த அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மான், ராஸ்–அல்–கெய்மான், உம்–அல்–குய்வான், பூஜாய்ரா ஆகிய ஏழு அணிகள் இதில் பங்கேற்கும். ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் இடம் பெறுவர்.
7 நாடுகள்:
யு.ஏ.இ., இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. துபாயில் முதல் முறையாக நடத்தப்படும் இத்தொடர், எதிர்காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படும்.
இத்தொடர் வெற்றி பெறும்பட்சத்தில், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி–20' தொடர் போல, "செவன் ஸ்டார்' சாம்பியன்ஸ் லீக் தொடரை நடத்தவும் வாய்ப்பு உள்ளது.
தோனியின் ராசி
இத்தொடருக்கான விளம்பர துாதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய கேப்டன் தோனியின் ராசியான எண் 7. இதன் அடிப்படையில் எல்லாமே ஏழு மயமாக உள்ளது. இவரது நெருங்கிய நண்பர் அருண் பாண்டேவின் ரிது ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் சேர்ந்து இத்தொடரை நடத்துகிறது. * அணிகளின் பெயர்கள், யு.ஏ.இ.,யை சேர்ந்த 7 நாடுகளை குறிக்கும் வகையில் உள்ளது.
* ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் மட்டுமே இடம் பெறுவர்.
* போட்டியில் இரண்டு அணிகளுக்கும் தலா 7 ஓவர்கள் வழங்கப்படும்.
* இந்த செய்தி7ம் தேதியான நேற்று வெளியிடப்பட்டது
பி.சி.சி.ஐ., மறுப்பு
ஏழு ஓவர் கிரிக்கெட் குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் படேல் வெளியிட்ட அறிக்கையில், " ஐக்கிய அரபு எமிரேட்சில் "7 ஓவர்' கொண்ட கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., இணைந்து நடத்துவதாக வெளியான செய்திகள் உண்மையல்ல. இதுகுறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டிடம், ஐ.சி.சி., விசாரித்தது. அப்படி எந்த தொடரையும் நடத்த, யாருக்கும் அனுமதி தரவில்லை என, ஐக்கிய அரபு போர்டு தெரிவித்தது,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்தமான டெஸ்ட் போட்டிகளால் வெறுத்துப் போன ரசிகர்களுக்கு ஒருநாள் (50 ஓவர்) போட்டி உற்சாகம் தந்தது. பின் அதிரடியான "டுவென்டி–20' போட்டி பெரும் வரவேற்பை பெற்றது.
தூதுவர் தோனி:
இந்த வரிசையில், 7 ஓவர்கள் கொண்ட புதுமையான "செவன் ஸ்டார்' லீக் தொடர் துபாயில் நடக்க உள்ளது. இதற்கு ஐ.சி.சி., இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதி அளித்துள்ளன. இதன் துாதராக இந்திய கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மார்ச் மாதம் இத்தொடர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனை அணிகள்:
ஐக்கிய அரபு .எமிரேட்சை (யு.ஏ.இ.,) சேர்ந்த அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மான், ராஸ்–அல்–கெய்மான், உம்–அல்–குய்வான், பூஜாய்ரா ஆகிய ஏழு அணிகள் இதில் பங்கேற்கும். ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் இடம் பெறுவர்.
7 நாடுகள்:
யு.ஏ.இ., இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. துபாயில் முதல் முறையாக நடத்தப்படும் இத்தொடர், எதிர்காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படும்.
இத்தொடர் வெற்றி பெறும்பட்சத்தில், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி–20' தொடர் போல, "செவன் ஸ்டார்' சாம்பியன்ஸ் லீக் தொடரை நடத்தவும் வாய்ப்பு உள்ளது.
தோனியின் ராசி
இத்தொடருக்கான விளம்பர துாதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய கேப்டன் தோனியின் ராசியான எண் 7. இதன் அடிப்படையில் எல்லாமே ஏழு மயமாக உள்ளது. இவரது நெருங்கிய நண்பர் அருண் பாண்டேவின் ரிது ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் சேர்ந்து இத்தொடரை நடத்துகிறது. * அணிகளின் பெயர்கள், யு.ஏ.இ.,யை சேர்ந்த 7 நாடுகளை குறிக்கும் வகையில் உள்ளது.
* ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் மட்டுமே இடம் பெறுவர்.
* போட்டியில் இரண்டு அணிகளுக்கும் தலா 7 ஓவர்கள் வழங்கப்படும்.
* இந்த செய்தி7ம் தேதியான நேற்று வெளியிடப்பட்டது
பி.சி.சி.ஐ., மறுப்பு
ஏழு ஓவர் கிரிக்கெட் குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் படேல் வெளியிட்ட அறிக்கையில், " ஐக்கிய அரபு எமிரேட்சில் "7 ஓவர்' கொண்ட கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., இணைந்து நடத்துவதாக வெளியான செய்திகள் உண்மையல்ல. இதுகுறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டிடம், ஐ.சி.சி., விசாரித்தது. அப்படி எந்த தொடரையும் நடத்த, யாருக்கும் அனுமதி தரவில்லை என, ஐக்கிய அரபு போர்டு தெரிவித்தது,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக