இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், ஜனவரி 31

உறவு . . .

கறாராகச் சொல்லி விட்டாள், காவேரி. "இதோ பார் கார்த்தி! கவிதாவை பல இடத்திலேருந்தும் வந்து பெண் பார்த்திட்டுப் போறாங்க. இந்த சமயத்துல நீ அவளோட பேசறதோ, பழகறதோ கூடாது. இனி அந்தப் பக்கம் வராதே."
கார்த்தி கலங்கினான். கவிதாவை உயிருக்குயிராய் நேசிக்கும் முறை மாப்பிள்ளையாயிற்றே!

"நான் ஏன் பேசக்கூடாது, பழகக் கூடாது. சொல்லுங்க."

"எம் பொண்ணுக்கு கல்யாணம் ஆகப்போகுது."

"அதெப்படி முடியும்? முறைப்பையன் நான் முழுமனசோட விரும்பறேன். நான்தான் கவி தாவை மணக்கப் போகிறேன்" என்றான் கார்த்தி.

"அதுக்கெல்லாம் உங்களுக்கு யோக்கியதை இல்லை."

"ஏன் இல்லை?"

"அதை உன் அம்மாவிடம் போய்க் கேள். அந்த அசிங்கத்தைச் சொல்லுவாள்..." காவேரி யிடம். வெறுப்பும், நெருப்பும் கலந்த மாதிரி அப்படியொரு வார்த்தை.

முகம் சிறுத்துப் போனான், கார்த்தி.

"போஸ்ட்!" என்று குரல் கேட்டது. வெளியே சென்று வாங்கி வந்தாள், காவேரி.

பிரித்துப் படித்தாள்...

"அன்புடையீர், வணக்கம். உங்களது மகள் கவிதாவை பெண் பார்த்து வந்தோம். ஆனால்... உங்கள் மகள் ஜாதகத்தை விட, வேறொரு பெண்ணின் ஜாதகம் சீரும் சிறப்பு மாக கிடைத்ததால்... அதையே பண்ணிக் கொள்ள முடிவு செய்து விட்டோம். உங்கள் பெண்ணுக்கும் அதுபோல் கிடைக்க நல்வாழ்த்துக்கள்."

-சுருக்கமாக எழுதியிருந்தது. காவேரியின் மனம் பொங்கியது. சீரும் சிறப்புமாக என்ற வார்த்தையில் கொஞ்சம் அழுத்தம் கலந்திருந்த மாதிரி பட்டது.

கவிதாவின் திருமணத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து வைத்த பணத்தில்... பாத்திரங்கள், நகைகள் என்று அவ்வப்போது வாங்கிச் சேர்த்து விட்டாள்.

தனக்கு அது நிறைவாகத் தெரிந்தாலும்... பிறருக்கு அது சாதாரணம்தான் என்பதை அந்த பேதை மனம் உணரவில்லை.

பத்து பதினைந்து இடங்கள் - இதுவரை வந்து போய் விட்டது.

ஒரு இடமும் அமைந்த பாடில்லை. இவ்வளவு நாட்களும் இருந்த வருத்தத்தினைக் காட்டி லும், இப்போது அவளுடைய வருத்தம் மிகுந்திருந்தது.


உள்ளே வரும்பொழுதே அம்மாவின் முகத்தைப் பார்த்து விட்டாள், கவிதா. வழக்கம் போலவே கடிதம். வழக்கம் போலவே பதில்.

அம்மாவை நெருங்கினாள்.

"ஏம்மா இப்படி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறாய்? அருகில் இருக்கும் மலையை விட தூரத்தில் இருக்கும் குன்றுதான் உனக்குப் பெரிதாகத் தெரிகிறதா? எனக் கேட்டாள்.

"என்னடி சொல்கிறாய்?"

"நம் குடும்பத்திலேயே மாப்பிள்ளை இருக்கும்பொழுது... நான் ஏன் வீணாகக் கவலைப் பட்டு, இல்லாத வரனுக்காக அலைய வேண்டும்?"

"நம் குடும்பத்திலா? யாரது?

"கார்த்தி! என் அத்தை பையன்."

"ச்சீ! நீயும் என் மகளா? உன் அத்தை எப்படிப்பட்டவள்! அவளது மகனை நான் மருமகனாக இந்தக் குடும்பத்தில் ஏற்பதா? அது ஒருக்காலும் நடக்காது!"

"ஏன் நடக்காது, நடக்கணும். நடக்கும். அவர்தான் எனக்கென்று நான் முடிவு செய்து விட்டேன். கார்த்தியுடன்தான் எனக்கு வாழ்க்கை" என்றாள் தீர்மானமாய் கவிதா.

"என்னடி சொன்னே? - என கையை ஓங்கினாள், காவேரி.

"நில்லுடி! என்ற குரல். கட்டிலில் படுத்திருந்த பாட்டி எழுந்து வந்தாள். காவேரியைப் பெற்ற அம்மாதான். கவிதாவின் பாட்டி. இதுவரை நடந்தயெல்லாம் பார்த்துக் கொண்டுதான் படுத்திருந்தாள்.

"தலைக்கு ஒசந்த புள்ளைய கைநீட்டி அடிக்கப் போறியே, உனக்கு புத்தியிருக்காடி?" என்று மகளை அதட்டினாள்.

"அம்மா! இதில் நீ தலையிடாதே. அவள் செய்கிற காரியத்துக்கு அவளைக் கொஞ்சவா முடியும்?"

"அவள் அப்படி என்ன செய்து விட்டாள்?. முறை மாமனை மணப்பேன் என்கிறாள், இதில் தவறென்ன?"

"என்னம்மா நீயும், புரியாமல் பேசுகிறாயே?. கார்த்தியின் அம்மா எப்படிப்பட்டவள்? அவள் மகனை..."

"சும்மா நிறுத்துடி! கார்த்தியின் அம்மா அப்படி என்ன செய்து விட்டாள்?."

"தன் வாழ்க்கையை தானே முடிவு செய்து கொண்டு... ஓடிப்போய் விட்டாள். இந்தக் குடும்பத்தால், விலக்கி வைக்கப்பட்டாள்..."

"போதும், போதும். அவள் ஓடிப்போனவள் என்பதால்... அவள் மகனை ஏற்க மறுக்கிறாயா?"

"ஆமா... ஆமா... ஆமா..." -காவேரியின் கோபக் குரலில் வெறி இருந்தது. பாட்டி ஒரு கணம் அமைதி காத்தாள்.

உள்ளே சென்று ஒரு துணிப் பையில் தன் புடவைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு வெளியே செல்ல முயற்சித்தாள்.

"அம்மா! என்ன இது, எங்கே புறப்பட்டு விட்டாய்?"

நீதானே சொன்னாய்! ஓடிப்போனவள் எவளுடைய உறவும் வேண்டாமென்று!

"அம்மா...!?"

"உன் அப்பாவை நான் எப்படி மணந்து கொண்டேன் தெரியுமா? மனதார விரும்பியவரை... உன் அப்பாவை மணக்க ஒரு போராட்டமே நடத்தினேன். எவரும் சம்மதிக்கவில்லை. உன் அப்பாவுடன் ஓடிப்போய்தான் மணந்து கொண்டேன். ஓடிப்போன ஒரு அம்மா உனக்குத் தேவையா?"

-எனக்கேட்க, காவேரியின் நெஞ்சில் இடிமுழக்கம். வீடே தலை கீழாய் சுழல்வதுபோல் தோன்றியது. இதுவரையில் அவள் அறியாத ரகசியம் அது. பிரமித்து நின்றாள்.

"உன் அப்பாவை நான் மணந்து கொண்டு நான் நெருப்பாக இருக்க வில்லையா? ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்கிற உயரிய எண்ணம் கொண்ட உன்னைப் பெறவில்லையா?"
"........................................."
"சூழ்நிலைகள்தான் மனிதர்களை உறவுக் கைதிகளாய் மாற்றி விடுகிறது. விரும்புகிற வாழ்க்கையை கொடுக்க முடியாத கோழையாய் வாழ்வதில் நமக்கும், விரும்பாத வாழ்க்கையை மறைமுகமாய் வெறுத்து ஏற்க முடியாமல் வாழ்வதில் உன் பெண்ணுக்கும் என்ன லாபம்? வாழாமல் வாழும் ஒரு வாழ்க்கை தேவையா?"

-இதுவரை ஊமையாகவே கட்டிலோடு படுத்துக் கிடந்த பாட்டி... இப்படியொரு நெருப்பு மழை பொழிவாள் என காவிரியோ, கவிதாவோ எதிர்பார்க்கவில்லை.

பாட்டியின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விம்மினாள், மகள் காவேரி. பாட்டியை கட்டிக் கொண்டாள், கவிதா.

உறவு என்பது ஒரு சுரங்கத்தைப்போல... அதில் வெட்டி எடுக்க வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட காவேரி...

"கார்த்தியை வரச்சொல்" என்றாள், மகள் கவிதாவிடம்.
நன்றி : கூடல் 

திங்கள், ஜனவரி 28

ஜித்தாவில் மொபைல் பள்ளிவாசல்.

ஜித்தாவில் செயல்பட்டுவரும் இந்த மொபைல் பள்ளிவாசல், வார விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு நம்மைத் தேடி வருகிறது.


படத்தில் காணும் இந்த மொபைல் பள்ளிவாசல், ஜித்தாவில் உள்ள'கார்னிச் பீச்' என்று அழைக்கப் படும், மக்கள் அதிகம் கூடும் கடல் கரைப் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை அன்று எடுக்கப் பட்டதாகும்.


இந்தப் பள்ளி வாசலின் முக்கிய நோக்கம்... அசர்,,மஃரிப், இஷா தொழுகைகளை சிலர் இதுபோன்ற பொழுது போக்கு பகுதிகளுக்கு செல்லும் போது வஃக்துக்கு தொழ இயலாமல் தொழுகையை இழக்க நேரிடும் அவ்வாறான சூழல்களில் இந்தப் பள்ளிவாசல் வஃக்துக்கு தொழுகையை நிறைவேற்ற உதவி புரிகின்றது.

இதன் வசதிகள்.:
ஒரு பள்ளி வாசலில் இருக்கும் பாங்கு சொல்ல மைக் ஸ்பீக்கர்.. உளூ செய்ய தண்ணீர்,,, முஸல்லாக்கள் ,, ..நூற்றுக்கணக்கனோர் நின்று தொழும் வகையில் விரிப்புகள். இன்னும் பள்ளிவாசலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. மேலும் இதற்குள் கழிப்பிட வசதியும் செய்யப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
இந்தப் பள்ளிவாசலை, ஜித்தா இஸ்லாமிய அழைப்பகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆம்புலன்ஸ் போன்ற உயிர்காக்கும் வாகன சேவையைப் போல், மறுமைக்கு முக்கிய காரணியான தொழுகையை நிறைவேற்ற இதுபோன்ற மொபைல் பள்ளி வாசல்களுக்கும் நம் சமுதாய அமைப்பினர் முயற்சி செய்யலாம்.

தகவல்:சகோ. A.H. முஹம்மது இல்யாஸ் - ஜித்தா மற்றும்  ImanTimes.

ஞாயிறு, ஜனவரி 27

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு நாளை முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு நாளை முதல் மீண்டும் பஸ் போக்குவரத்தும் வர்த்தகமும் தொடங்குகிறது.


கடந்த 8-ந்தேதி காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 2 இந்திய வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் தலை துண்டித்து கொலை செய்தது. இதனால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டு இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து இந்தியாவிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பஸ் போக்குவரத்தையும், வர்த்தகத்தையும் மத்திய அரசு தடை செய்தது. இதனால் இரு நாட்டு எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டனர்.

தற்போது எல்லையில் அமைதி நிலவுகிறது. கடந்த 10 நாட்களாக எந்த துப்பாக்கி சண்டையும் நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு மீண்டும் பஸ் போக்குவரத்தையும், வர்த்தகத்தையும் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாளை முதல் கட்டமாக காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லை வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பஸ் விடப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் வந்த 100 பயணிகள் திடீர் என்று பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் காஷ்மீரில் தவிக்கிறார்கள். அவர்கள் நாளை செல்லும் பஸ்சில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இதேபோல் எல்லைப் பகுதியில் நடைபெற்று வந்த வர்த்தகமும் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.

இதற்கிடையே நேற்று குடியரசு தினத்தையொட்டி காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

இருநாட்டு ராணுவ அதிகாரிகளிடையேயான வழக்கமான கொடி அணி வகுப்பு கூட்டமும் பூஞ்ச் பகுதியில் நடந்தது.

நன்றி : மாலைமலர் 

சனி, ஜனவரி 26

குடியரசு தினவிழா.

குடியரசு தினவிழா, சிறப்பு விருந்தினராக, இந்தியா வந்துள்ள பூடான் மன்னர், ஜிக்மி நாம்கியால் வாங்சுக் மற்றும் அவர் மனைவி ஜஸ்டின் பெமா ஆகியோரை வரவேற்கும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
குடியரசுதின விழா கொண்டாட்டம் : தேசியக்கொடியை ஏற்றினார் பிரணாப்.




சென்னை: நாட்டின் 64வது குடியரது தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர் ரோசய்யா தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றுள்ளார். விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் படை வலிமையை பறை சாற்றும் வகையில் பல்வேறு அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.


வீரதீர செயல்களை புரிந்தோருக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். மேலும் கோட்டை அமீத் மத நல்லிணக்கத்திற்கான பதக்கம் அயூப்கானுக்கு வழங்கப்பட்டது. காவல்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டது. குடியரசுதினத்தையொட்டி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

செவ்வாய், ஜனவரி 22

ஒரு மழை நாளில் !

அது கோடை மழையும் இல்லை. பருவமழையும் இல்லை. திடீர் மழை போல கடந்த இரண்டு நாளாக விடாது கொட்டிக் கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடு. மனித நடமாட்டமே முடங்கிப் போனது. யாரும் வெளியில் தலைகாட்டவில்லை. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தாகி விட்டது. நேற்றுவரை விரிசலோடிக்கிடந்த கண்மாய்களில் நீர் வெள்ளமாய் நிறைந்து வழிந்தது.

"இந்தத் தண்ணீரை நம்பி குறுகியகாலப் பயிர்கூடச் செய்யலாம்" என்று தேநீர்க் கடைகளில் முடங்கிக்கிடந்தவர்கள் பேசிப் கொண்டார்கள்.

எதுவுமே அளவோடு இருந்தாலே நல்லது என்பது போல பொதுமக்கள் பேசத் தொடங்கினார்கள். மூன்றாம் நாளும் மழை தொடர்ந்தால் விபரீதமாகும் என்பது புரிந்தது. மாவட்டத்தின் பெரும் பகுதி மழையின் பாதிப்புக்கு ஆளாகியிருந்ததால், காவல் துறையிலிருந்து வருவாய்த் துறைவரை முடுக்கிவிடப்பட்டிருந்தது.

இது போதாதென்று அப்போது சட்டமன்றமும் செயல்பட்டுக் கொண்டிருந்ததால், மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர். அதைத் தொடர்ந்து முதல்வர் ஆணையிட மாவட்ட ஆட்சியரே நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயல்பட்டார்.

மழைநீர் வடிவதற்கென அமைந்த உப்பாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் நீர் பரவத் தொடங்கியதால் வருவாய்த்துறையினரின் ஒத்துழைப்போடு பொதுப் பணித்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர்.

வெள்ளம் பாதித்த இடங்களைப் பார்வையிட மாவட்ட ஆட்சியர் அங்குவந்து சேர்ந்தார். அவரை வரவேற்ற அதிகாரிகள் நிலையை விளக்கிச் சொன்னார்கள். அந்த நேரத்தில் கிராமத்து ஆள் ஒருவர் தலைதெறிக்க ஓடிவந்தார்.

"ஐயா... கும்பிடுறேனுங்க... நான் ஆதனூரிலிருந்து வர்றேங்க. அந்த ஊர்க்கண்மாய் நிரம்பி மறுகால் போகுது. நாங்களும் எவ்வளவோ வெட்டிவிட்டுப் பார்த்தோம். ஆனால், வரத்து நீர் அதிகமிருக்கிறதனாலே தண்ணி எக்கச்சக்கமா வருதுங்க. மழையும் நிக்கிறமாதிரி தெரியலே. உடனடியா....."

"உம்.....சொல்லுங்க.......உடனடியா என்ன செய்யணும்."

"ஐயா.....மூணு இடத்திலே கண்மாய் உடையுறமாதிரி இருக்குங்க. இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ளே அந்த மூணு இடத்திலேயும் அணை போடலேன்னா நிலமை விபரீதமாயிடும்."

இந்த நேரத்தில் தாசில்தார் குறுக்கிட்டார். "கண்மாய்க்குக் கிழக்கே பத்து கிராமம் இருக்கு. நம்ம எம்.எல்.ஏ. கிராமமும் அதுல ஒண்ணு...."

இதைச் சொன்னதுமே அந்தக் குளிரிலும் ஆட்சியரின் நா வறண்டது. "சரி இப்ப என்ன செய்யலாம் சொல்லுங்க."

"ஐயா.....ஆயிரம் சிமெண்டு சாக்கு வாங்கி எங்கேயாவது மேடான பகுதியிலிருந்து மணலை வெட்டி, சாக்கில் போட்டு உடனே கண்மாய்க்கரையைக் பலப்படுத்தணும்."

"தாசில்தார்....உங்கள் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் யாரு?"

"சார்....நான்தான் சார்.....அங்குசாமி....."

"சரி, மிஸ்டர் அங்குசாமி. நீங்கள் என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ஆயிரம் சாக்கு வாங்கி, மணலை அடைத்து கண்மாய்க்கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தாகணும்."

அருகே நின்றுகொண்டு இருந்த பொறியாளர் பக்கம் ஆட்சியரின் பார்வை திரும்பியது.

"ஏன் சார்.....உங்கள் இருப்பிலே மணல் சேமிப்பு இருக்கா?"

"ஓரளவு இருக்கு சார். நூறு, நூற்றைம்பது மூட்டை தேறும். பாக்கி மூட்டைக்கு வெளியேதான் பார்க்கணும்." அவரது குரல் கம்மியது. ஆட்சியர் என்ன சொல்வாரோ என்று பயந்தவாறு நின்றதை அவரது முகம் காட்டியது.

"பரவாயில்லை மிஸ்டர் அங்குசாமி. உங்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்கிறேன். இப்ப மணி மூணு. நான் ஆறு மணிக்குக் கண்மாய்க்கு வருவேன். அதற்குள்ளாக இந்த வேலையை முடிச்சு வையுங்க. நொண்டிச்சாக்குச் சொல்றது எனக்குப் பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்."

ஆட்சியர் காரில் ஏறி புறப்பட்டார். எல்லாரும் பரபரப்புடன் அங்கிருந்து அகன்றார்கள். சற்றுநேரம் பின்வாங்கியிருந்த மழை திரும்பவும் கொட்டத் தொடங்கியது.

அந்த நேரத்தில் அத்தகைய பெரும் பொறுப்பு தன் மீது விழும் என்று அங்குசாமி எதிர்பார்க்கவில்லை. எனினும் தனது நீண்டகால அனுபவத்தால் நிலையைச் சமாளிக்க முற்பட்டார். ஜீப்பை எடுத்துக்கொண்டு எங்கெல்லாமோ அலைந்தார். அவர் ஊகித்தது சரியாக இருந்தது.

மூன்று நாள் முன்னர் அனுமதி இல்லாமல் ஆற்றில் மணல் அள்ளிச் சென்ற பத்து லாரிகள் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அவரது சிந்தனையில் மின்னலெனப் பளிச்சிட்டது. பத்து வேலை ஆட்களும் சாக்குமாய் அங்குபோய்ச் சேர்ந்தார்.

ஜீப்பைக் கண்டதும் இன்ஸ்பெக்டர் பதறியடித்துக் கொண்டு வந்தார். அவரிடம் ஆட்சியரின் ஆணையை விளக்கினார், அங்குசாமி. அவ்வளவுதான், அரைமணி நேரத்தில் ஆயிரம் மூட்டை மணல் தயாரானது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிகளிலேயே மூட்டைகளை எடுத்துக்கொண்டு, கண்மாய்க் கரைக்குப் போனார். அடுத்த, அரைமணி நேரத்தில் உடைப்பு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் மணல் மூட்டைகள் நெருக்கமாக அடுக்கப்பட்டன. இனிமேல் உடைப்பெடுக்க வழியில்லை என்பது உறுதி செய்யப்பட்டதும் நீண்ட பெரும்மூச்சு விட்டார், அங்குசாமி.

இதற்குள்ளாக அங்குவந்து சேர்ந்த தாசில்தார், சற்று தள்ளி ஜீப் அருகே நின்றவாறு சிகரெட் புகைத்துக்கொண்டு இருந்தார். அவரை நோக்கிச் சென்ற அங்குசாமியின் முகத்தில் களைப்புக் காணப்பட்டது. தாசில்தாரின் காதருகே ஏதோ சொன்னார். சிரித்தவாறு கேட்டுக்கொண்டிருந்த தாசில்தார் உடனே அங்குசாமியை இறுக அணைத்து கைகளைப் பற்றிக் குலுக்கினார்.

"மிஸ்டர் அங்குசாமி, உங்களை என்னால மறக்கவே முடியாது. ஆட்சியர் இன்னும் சற்றுநேரத்தில் இங்கே வருவார். இல்லையென்றால் நானே நேரில் உங்களை அழைத்துச் செல்வேன். பரவாயில்லை. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்ற அவரது கண்கள் பனித்தன.

அங்குசாமி விம்மிவிட்டார். எல்லாரும் அவரையே கவனிக்கிறார்கள் என்பது தெரிந்ததும் ஒருவாறு சமாளித்து, "சார்....வர்றேன்" என்றவாறு ஜீப்பில் ஏறினார்.

"டிரைவர்........சாரை இறக்கிவிட்டுட்டு வாங்க, நேரமானாலும் பரவாயில்லை......"

அங்குசாமியை ஏற்றிக் கொண்டு ஒருபுறத்தில் ஜீப் மறையவும் மறுபுறம் ஆட்சியரின் கார் வந்து சேர்ந்தது. தாசில்தார் ஓடிச்சென்று வரவேற்றார்.

கண்மாய்க்கரையில் ஏறி நாலாபுறங்களிலும் பார்த்தார் ஆட்சியர். அப்போது மழை தூறிக்கொண்டிருந்தது. ஆனாலும் வானம் இருண்டுபோய் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

ஆட்சியர் புன்னகையோடு கீழே இறங்கி வந்தார். "பலே! அருமையாச் செய்திட்டீங்க. இனி மழையைக் பற்றிக் கவலையில்லை. எங்கே உங்க ரெவின்யூ இன்ஸ்பெக்டர் அங்குசாமி...."

"சார்......." தாசில்தாருக்கு வார்த்தை வரவில்லை.

"சொல்லுங்க, என்ன விசயம்".

"சார் இன்று மாலையோட அவர் ஓய்வுபெற்று விட்டார். நீங்கள் வருவதற்குள் எல்லாத்தையும் செய்து முடிச்சிட்டு ஐந்து மணிக்கு என்னிடம் இருந்து விடைபெற்று போயிட்டார் சார்"

ஆட்சியர் வியப்புடன் நிமிர்ந்தார்.

நன்றி: நிழல்கள் & 
கூடல்

வியாழன், ஜனவரி 17

நடிகன் என்னும் பொய்வேஷம் !

எப்பொழுதும் போலத் தான் அன்றைய பொழுதும் விடிந்தது தொழிலதிபர் ராஜசேகரன் இல்லத்திற்கு. வழக்கம் போல முதலில் தேநீர் முகத்தில் தான் முழித்தார் ராஜசேகரன். ஆனால் மனைவி வைஷ்ணவி இன்று போட்ட டீ இன்று மிகவும் நன்றாக தெரிந்தது இராஜசேகரனுக்கு.

இராஜசேகரன் பிறப்பால் ஓர் பெரிய தொழில் அதிபர் தான் என்று பார்ப்பவர்கள் எல்லாம் நினைப்பார்கள். ஆனால் அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா கிடையாது. அம்மா மட்டுமே. அவளும் இராஜசேகரனுக்கு பதினைந்து வயது இருக்கும் போதுஇறந்து போனார். தங்கள் குடும்பத்திற்கு என இருந்த ஒரே நிலத்தையும் விற்று அதில் கிடைத்த லட்சம் ரூபாய் முதலீட்டை கொண்டு ஓர் சிறிய ரைஸ் மண்டி வைத்தார். இன்று அந்த தொழிலில் பெரிய மனிதராகி கார்... பங்களா அப்பப்பா.

பணத்தின் அருமை தெரிந்த ஒருத்தியே தனக்கு மனைவியாய் வர வேண்டும் என்ற இராஜசேகரனின் ஆசைபடியே, இராஜசேகரின் வீட்டிற்கு விளக்கேற்றியவள் தான் வைஷ்ணவி.

அவர்களுக்கு பிறந்த மூத்த மகன் தான் ரமேஷ். அவன் செல்வந்தர் மகன் என்பதால் நல்ல செலவழிப்பான். இது தான் ராஜசேகரனுக்கும் ரமேஷ்க்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழும்பக் காரணம் ஆகும்.

இரண்டு பேருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கே நேரம் சரியாய் போய்விடும் வைஷ்ணவிக்கு. இராஜசேகரன் ஒரு பைசாவை கூட செலவு செய்வது என்றால் மிகவும் யோசிக்க கூடியவர்.

அவரது தும்மலும் கூட பத்து பைசா வரயே செல்லும். ஆனால் இராஜசேகரன் கருமியல்ல. பணத்தின் அருமை புரிந்தவர். இந்த நிலையில் தான் ஒரு சிக்கல்.

இதுவரைக்கும் அவரது ரைஸ் மண்டியிலிருந்து கிடைத்த லாபம் நிர்வாகச் செலவு போக ஓர் அளவிற்கே உட்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது விளைச்சல் குறையவும் லாபம் அதிகமாயிற்று. அதனால் தான் வருமானவரி கட்ட வேண்டிய சிக்கல் வந்தது. வைஷ்ணவியும் ஏற்கனவே இதை ஞாபகப்படுதிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் இராஜசேகரன் இந்த விஷயத்தில் தாமதம் காட்டி வந்தான்.

இன்றைய செய்தித்தாளை பேப்பர்காரன் வாசலில் அவனுக்கே உரிய தோரணையில் வாசலில் விட்டெரிந்து விட்டு "அம்மா பேப்பர்" என்று ராகமும் பாடினான்.

வழக்கம் போல வைஷ்ணவி தான் வந்து பேப்பரை எடுத்தாள். செய்தித்தாளின் முன் பக்கத்தில் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டு இருந்த செய்தி வைஷ்ணவி கண்ணில் பட்டது.

"என்னங்க" ஒரே உச்ச சாயலில் கூப்பிட்டாள் வைஷ்ணவி.

"என்ன வைஷ்ணவி! காலம் காத்தால" என்றார் இராசசேகரன்.

"இத பாருங்க! இந்த நியூஸ் பேப்பர்ல என்ன போட்டிருக்குன்னு பாருங்க"

"என்ன போட்டிருக்கு! கொடு பார்ப்போம் வருமான வரி கட்டாதவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை தொழிலதிபர் மீது வருமானவரி சோதனை"

"அதற்கு என்ன செய்ய சொல்லுற" என்றார் இராசசேகரன் ஒன்றும் தெரியாதவர் போல
" என்ன செய்யவா" பத்ரகாளி ஆனால் வைஷ்ணவி.

"ஆமாங்க! நான் சொல்லறது கிண்டலாய் தாங்க இருக்கும் உங்களுக்கு. வருமான வரி கட்டாமல் ஏய்ப்பது நமது நாட்டிற்கு நாம் தெரிந்தே செய்கிற துரோகம்ங்க" என்று ஒரு பாடமே நடத்தினாள் வைஷ்ணவி.

"வருமான வரி கட்டணும்ணா. நமக்கு வருகிற லாபத்திற்கு எவ்வளவு கட்டணும். காசோட அருமை தெரிஞ்சா தானே உனக்கு" பதிலுக்கு இராஜசேகர்.

"இப்ப காசு கட்ட பயந்தா. பிறகு சிறைக்கு போன பின்னாடி பணம் நெறைய செலவழிக்கணும். அது மட்டுமா ,மன உளைச்சல் வேறு" இது வைஷ்ணவி.

"பாத்துகிட்டே இரும்மா இவரு கம்பிதான் எண்ணப் போறாரு. இராஜசேகரனு பேரு வைச்சதும் போதும் இவருக்கு வரவர வில்லன் கெட்டப் வந்து விட்டது" இளமைக்கே உரிய துள்ளலுடன் ரமேசும் சேர்ந்து கொண்டான்.

"ம்... இந்த வீட்ல என்னை நிம்மதியாவே இருக்கவே விடுறாங்க இல்ல" சலித்து கொண்டார் இராஜசேகரன்.

வழக்கம் போல இராகம் பாட ஆரம்பித்தாள் வைஷ்ணவி " எம் பேச்சை இந்த வீட்ல யாருதான் கேட்கறாங்க. புருஷன் அப்படி, புள்ள இப்படி" இடைஇடையே அவளது பாட்டிற்கு ஏற்ப தாளம் போட்டன வைஷ்ணவி வீட்டு சமையலறை பாத்திரங்கள்.

வீட்டில் யாரும் பேசவில்லை. இராஜசேகரனுக்கு ஒரே தஞ்சம் தொலைக்காட்சிப் பெட்டி அவருக்கு பிடித்த நடிகர் கமலேஸ் குமார் வருமானவரி கட்ட வேண்டும் என்பதை பற்றி தொலைகாட்சியில் பேசினார்.

மதியம் இராஜசேகரன் வீட்டிற்கு வந்தார். "வைஷ்ணவி இந்த பைலை பத்தரமாக வை; இதுல வருமான வரி கட்டியதற்கான விபரமெல்லா இருக்கு சரியா" என்றார் இராஜசேகர்.

"வருமானவரியா? கட்டி விட்டீர்களா? எப்படி" தொடர்ந்தாள் வைஷ்ணவி.

"நடிகர் கமலேஷ் குமார் சொன்ன பிறகு தான் வருமான வரி கட்ட வேணுங்கிறது நியாமுன்னு தெரிஞ்சது"

"நாங்க சொன்னத கேக்கல. கமலேஷ் குமார் சொன்னா கேட்கிறார். இனிமே எதையாவது இவர செய்ய வைக்க வேணுமுன்னா, கமலேஷ் குமாரத்தான் கூப்பிடனும்" நொந்து போனாள் வைஷ்ணவி.

மறுநாள்,

செய்தித்தாளில் வந்த செய்தி இராசசேகரனை அதிர செய்தது. செய்தி இதுதான்.

"நடிகர் கமலேஷ் குமார் வருமானவரி ஏய்ப்பு. அவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை."

நடிகன் என்னும் பொய் வேஷத்தை நம்பிய இராஜசேகரன் மனம் குறுகிப் போனது.

நன்றி : கூடல் 

புதன், ஜனவரி 16

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் காயிதே மில்லத் தெரு ஜனாப்.ரஹ்மான் மற்றும் ஹாஜா 
அவர்களின் தாயார் மெஹர்பான் பீவி நேற்று இரவு காலமானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

செவ்வாய், ஜனவரி 15

அம்மா சொன்ன 'சுரீர்' வார்த்தை?

அவன் அன்றைக்கும் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வந்தான். ஆனால் வழக்கமாக இல்லாமல் நிரம்ப குடித்திருந்தான்.
இரண்டு கண்களும் சிவந்து, உடம்பு முழுக்க வியர்வை வழிய, வாயின் இரண்டு ஓரங்களிலும் வாந்தி எடுத்த தடத்துடன், கொஞ்சம் தள்ளாடி தள்ளாடி இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தான். வாயிலிருந்து வெளிப்பட்ட குப்பென்ற மதுவாடை மதுவை விரும்பி குடித்த அவனுக்கே பிடிக்கவில்லை தான் போலும்... அந்த வாடை அவனுக்கு கொஞ்சம் கோபத்தையும், எரிச்சலையும் தந்தது.

வீட்டு கதவை தொட்டு தடவி வலது பக்கத்தில் இருந்த காலிங்பெல்லை வேகமாக அழுத்தினான்.
வீட்டுக்குள் விளக்கு எரிந்தது. கதவை திறந்து கொண்டு அவனுடைய வயதான அம்மா நின்று கொண்டிருந்தாள்.
"ஏம்பா...இவ்ளோ லேட்டு..?" என்று வீட்டின் முன்பக்கத்தில் இருந்த கடிகாரத்தை பார்த்தபடியே மகனை உள்ளே கூட்டிக்கொண்டு போனாள்.
கடிகாரம் மணி நள்ளிரவு பனிரெண்டரை என்று காட்டியது.
இல்லமா...கொஞ்சம் வேலை அதிகம் என்று அவன் சொல்லி சமாளித்தாலும் அவன் கூடவே சேர்ந்து வரும் மதுவின் வாடை அவன் தாமதமாக வந்த காரணத்தை அவளுக்கு உணர்த்தியது. அவள் எதையும் அவனிடம் கேட்டுக்கொள்ளவில்லை.
அவன் கைப்பையை வாங்கி ஒரு மூலையில் வைத்து விட்டு அவனை கிணற்றடிக்கு அழைத்து சென்று அவன் ஆடைகளை களைந்து விட்டு, அவன் உடல் முழுவதுமாய் நனையும் படி தண்ணீரை வாரி இரைத்து ஊற்றினாள். நடு இரவு என்பதால் நீர் வழக்கத்தை விட அதிகமாக குளிரும் தான். ஆனால் அவன் இருக்கும் மனநிலையில் அதை அவனால் உணர முடியவில்லை.
மகனை வீட்டுக்குள் கூட்டிச்சென்று நாற்காலியில் உட்கார வைத்து ஈரம் படிந்த அவன் தலையை நன்றாக துடைத்தெடுத்து அதிகபட்ச வேகத்தில் மின்விசிறியை ஓட விட்டு அவனுக்கு வேறு உடை மாற்றி விட்டாள்.
அவன் சாப்பிடுவதற்கு சாப்பாடு எடுத்து வந்து அவனை சாப்பிடச் செய்தாள். கூடவே எப்போதும் இரவில் மகனுடன் சேர்ந்து சாப்பிடும் அவள் அவனுடன் சேர்ந்து சாபிட்டாள்.
பின்பு மகனை ஒரு கட்டிலில் படுக்க வைத்து, உடம்பை முழுவதுமாக மூடும்படி உள்ள ஒரு போர்வையை அவன் மேல் போர்த்தி விட்டு அந்த கட்டிலின் பக்கத்தில் விரிக்கப்பட்டிருந்த தனக்கான பாயில் படுத்துக்கொண்டாள்.
காலை விடிந்தது...
அம்மா வாசலில் மாட்டுசாணம் தெளிப்பது, கோலம் போடுவது, குடிப்பதற்கு தண்ணீர் எடுப்பது, காலை சிற்றுண்டி தயாரிப்பது என்று அவளுடைய வழக்கமான வேலைகளை செய்து கொண்டிருந்தாள்..
இவன் பல் துலக்குவது, காபி குடிப்பது, பேப்பர் படிப்பது, சிறுது தூரம் நடைபயிற்சி பழகுவது என்று வழக்கமான தனது வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
இவற்றையெல்லாம் முடித்து விட்டு குளித்து வேலைக்கு கிளம்ப தயாராகும் தன் மகனுக்கு உணவை ஒரு கிண்ணத்தில் அடைத்து தயாராக வைத்திருந்த அம்மாவிடம் அதை வாங்கிக்கொண்டு தனது இரண்டு சக்கர வாகனத்தை உதைத்து கிளம்பும் போது "அம்மா நான் போயிட்டு வர்றேன்" என்று அவன் விடைபெற, அதற்கு அம்மா "சரிப்பா பத்திரமா போயிட்டு வா...ஆனா நேத்து நைட்டு வந்த மாதிரி வராதப்பா...அத அம்மாவால தாங்கிக்க முடியாதுப்பா" என்று சொன்னாள்.
"நாகரீகம்" என்று வார்த்தையைகூட எழுத தெரியாத அம்மாவின் அந்த ஒரு வார்த்தை அவனுக்கு "சுரீர்" என்றிருந்தது.
நன்றி : கூடல் 

திங்கள், ஜனவரி 14

Jobs In Saudi Bin Ladin (Group).

Dear Brothers,

Assalamu Alaikum.....

Saudi Bin Ladin (Group) - HR representatives are coming to Chennai on 16-01-2013 and 17.01.13 for the recruitment of  Electrical - Mechanical Engineers, Foremen and Technicians.
Interview will be conducted in 
MM International, 
Linghi Chetty St,
Mannady, Chennai.

PH: 044 - 42052031
Please refer dailythanthi newspaper today edition (13.01.13)

Msg From : Mr. Jahir Hussain - KSA.

ஞாயிறு, ஜனவரி 13

Saudi jobs..

Safari is one of the largest and leading companies in the Kingdom of Saudi Arabia, we operates variety of business and looking for talents to join our winning team:


OPERATION & MAINTENANCE
PROJECT MANAGER O&M – CODE – M001
MECHANICAL ENGINEER – CODE – M002
ELECTRICAL ENGINEER – CODE - M003
CIVIL ENGINEER – CODE – M004
ARCHITECT ENGINEER – CODE – M005
MECHANICAL TECH. – CODE – M006
ELECTRICAL TECH. – CODE – M007
Q/A HEAD ENGINEER – CODE – M008
SCHEDULING ENGINEER – CODE – M009
WORK CONTROL & SCHEDULING HEAD ENGINEERING – CODE - M010
CALL CENTER HEAD ENGINEER – CODE – M011
ELECTRICAL TECHNICIAN LV, HV & MV – CODE – M012
ESCALATORS TECHNICIANS – CODE – M013
LIFTS TECHNICIAN – CODE – M014
HOME APPLIANCES TECH. – CODE – M015
CAD OPERATOR – CODE – M016
SUPPORT SERVICES HEAD ENGINEER – CODE – M017
AUTO MECHANIC – CODE – M018
Q/A ENGINEER – CODE – M019
CIVIL & ARCH. DEPARTMENT HEAD – CODE – M020
MECHANICAL DEPARTMENT HEAD – CODE – M021
HVAC ENGINEER – CODE – M022
SWIMMING POOL SUPERVISOR – CODE – M023
LPG SUPERVISOR – CODE – M024
ELECTRICAL DEPARTMENT HEAD – CODE – M025
FIRE & SAFETY ENGINEER – CODE – M026

FASHION RETAIL
FASHION BRAND MANAGER (FEMALE ONLY) – CODE – F001
AREA MANAGER – CODE – F002
MARKETING MANAGER – CODE – F003
MALE SALES STAFF – CODE – F004
FEMALE SALES STAFF – CODE – F005
STOCK CONTROLLER – CODE – F006

HOSPITALITY
BRAND OPERATION MANAGER – CODE – H001
AREA OPERATION MANAGER – CODE – H002
RESTAURANT MANAGER – CODE – H003
ASSISTANT RESTAURANT MANAGER – CODE – H004
WAITER – CODE – H005
CASHIER – CODE – H006
TRAINEE – CODE – H007

CONSTRUCTION
PROJECT SITE MANAGER – CODE – C001
CONSTRUCTION MECHANICAL ENGINEER – CODE – C002
CONSTRUCTION ELECTRICAL ENGINEER – CODE – C003
CONSTRUCTION CIVIL ENGINEER – CODE – C004
ARCHITECT ENGINEER – CODE – C005
MECHANICAL TECHNICIAN – CODE – C006
ELECTRICAL TECHNICIAN – CODE – C007
PROFESSIONAL PAINTERS – CODE – C008
CLUTTERING CARPENTER – CODE – C009
STEEL FIXER – CODE – C0010
SAFETY OFFICER – CODE – C0011

Rewarding and competitive salaries, Housing Allowance, Medical Insurance, Training, and an Attractive work environment. Send your CV of one page with a job code in the subject of the email to:

Email: cv@safari.com.sa
Or: career@safari.com.sa

Message from : Mr.Jahir Hussain..KSA.

சனி, ஜனவரி 5

துபாயில் த‌மிழ‌க‌ கல்லூரி நிர்வாகிக‌ளுக்கு வ‌ர‌வேற்பு.


துபாய் : துபாய் ஈமான் அமைப்பு திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து கல்லூரி நிர்வாக‌க் குழுவின‌ருக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சியினை டிசம்பர் 25ம் தேதி மாலை லேண்ட்மார்க் ஹோட்ட‌ல் கிராண்டில் வெகு சிற‌ப்புற‌ ந‌ட‌த்திய‌து. ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ.லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் மைதீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். அட‌ம‌ங்குடி அப்துல் ர‌ஹ்மான் இறைய‌ருட்பா பாடினார். குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ லியாக்க‌த் அலி த‌லைமையுரை நிகழ்த்தினார். க‌ல்விக்குழுச் செய‌லாள‌ர் ஹிதாய‌த்துல்லா வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார். திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி தாளாள‌ர் முனைவ‌ர் ஏ.கே. காஜா ந‌ஜீமுதீன் சாஹிப், துணைச் செய‌லாள‌ர் எம்.ஜே. ஜமால் முஹ‌ம்ம‌து சாஹிப், முத‌ல்வ‌ர் முனைவ‌ர் ஆர். காத‌ர் முஹைதீன் சாஹிப், ஜமால் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் இய‌க்குந‌ர் முனைவ‌ர் கே. அப்துஸ் ஸ‌ம‌து, சுய‌நிதிப்பிரிவு இய‌க்குந‌ர் அப்துல் காத‌ர் நிஹால் ஆகியோர் சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளாக‌ க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். முனைவ‌ர் ப‌ட்ட‌ம் பெற்ற‌ தாளாள‌ருக்கும், க‌ல்லூரிக்கும் ஈமான் அமைப்பின் நினைவுப் ப‌ரிசினை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ துணைப் பொது மேலாள‌ர் அல்ஹாஜ் ஹ‌மீது கான் வ‌ழ‌ங்கினார். திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி தாளாள‌ர் முனைவ‌ர் ஏ.கே. காஜா ந‌ஜீமுதீன் சாஹிப் ஏற்புரை வழங்கினார். ம‌க்க‌ள் தொட‌ர்பு ம‌ற்றும் ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த் ந‌ன்றியுரை நிக‌ழ்த்தினார். துஆவுட‌ன் நிக‌ழ்ச்சி நிறைவுற்ற‌து. ஈமான் அமைப்பின் நிர்வாகிக‌ள் அஹ‌ம‌து முஹைதீன், முதுவை ஹிதாய‌த், ஹ‌மீது யாசின், சாதிக் பாட்சா, முஹைதீன், முஸ்தபா, சாகுல், ச‌ர்புதீன், ஹ‌பிபுல்லா, அப்துல் ர‌சாக், முபார‌க் அலி உள்ளிட்ட‌ நிர்வாகக் குழுவின‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.
- நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
நன்றி : தினமலர் ..