இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், மார்ச் 7

பள்ளிவாசல், தர்கா சீரமைப்புக்கு நிதி கோரி விண்ணப்பிக்கலாம்: தமிழக வக்பு வாரியம் அறிவிப்பு.

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல் மற்றும் தர்கா சீரமைப்புக்கு நிதி கோரி விண்ணப்பிக்கலாம் என வக்பு வாரியம் அரிவித்துள்ளது.


இது குறித்து தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் 
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு வக்பு நிறுவன மேம்பாட்டு நிதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
இத்திட்டத்திற்கு வக்பு நிறுவன மேம்பாட்டு நிதி அளிக்க விரும்புபவர்கள், 

முதன்மை செயல் அலுவலர், 
தமிழ்நாடு வக்பு வாரியம், 
எண்.1. ஜாபர் சிராங் தெரு, 
வள்ளல் சீதக்காதி நகர், 
சென்னை - 600 001.
 என்ற முகவரிக்கு விண்பிக்க வேண்டும். மேலும் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி தேவையுள்ள வக்பு நிறுவனங்கள் உரிய திட்ட மதிப்பீடு, வரைபடம், புகைப்படம் போன்ற விவரங்களுடன் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக