இந்த வலைப்பதிவில் தேடு

புதன், நவம்பர் 30

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் காயிதே மில்லத் தெரு ஜனாப்.அப்துல் அலி அவர்களின் தங்கை மற்றும் நூலகதெரு(அக்பர் தெரு) ஷேக் அலாதீன் தாயார் "குப்பும்மா" என்று அழைக்கபடும் இவர் இன்று காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

செவ்வாய், நவம்பர் 29

நமது ஊர் தலைவருக்கு ஈமான் அமைப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பனந்தாள் ஜமாஅத் தலைவர்.அல்ஹாஜ்.ஜனாப் சர்புதீன்அவர்களுக்கு இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன்( ஈமான் )அமைப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.ஈமான் துணைத்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.


நிகழ்வின் போது ஈமான் அமைபின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி,ஈமான் மக்கள் தொடர்பு செயலாளர் A.முஹம்மது தாஹா,உறுப்பினர்கள்,TPLJI-UAE வின் பொது செயலாளர் பிர்தௌஸ் மற்றும் ஊடகத்துறை செயலாளர் மு.முபாரக் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.


அணைக்கரை பாலம் மிக விரைவில் இயங்க போகிறது.

அணைக்கரை பாலம் மிக விரைவில் இயங்க போகிறது.
   நமது தொகுதி MP O.S .மணியன் விரைவில் மாவட்ட ஆச்சியரை சந்தித்து 
 அணைக்கரை பாலத்தை திறக்க இருப்பதாக கூறினார்.
   
REF : சன் நியூஸ்

திங்கள், நவம்பர் 28

ஜனாப்.முஹம்மது ரியாஸ் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் காயிதே மில்லத் தெரு ஜனாப்.முஹம்மது ஆரிப் இவர்களின் மகன் ஜனாப்.முஹம்மது ரியாஸ் (செல்லப்பா) அவருக்கு அழகான ஆண் குழந்தை 23 - 11 - 2011 புதன்கிழமை அன்று மதியம் பிறந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

ஞாயிறு, நவம்பர் 27

திருப்பனந்தாள் ஜமாஅத் தலைவர்.அல்ஹாஜ்.சர்புதீன்க்கு அபுதாபியில் வரவேற்பு.

திருப்பனந்தாள் ஜமாஅத் தலைவர்.அல்ஹாஜ்.சர்புதீன் அவர்களுக்கு அபுதாபியில் திருப்பனந்தாள் ஜமாதுல் இஸ்லாமிய U.A.Eவின் அபுதாபிகிளை சார்பில் நமது ஊர் நண்பர் ஹிதயாதுல்லா இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அபுதாபி செயலாளர் ஜனாப்.தீன் முஹம்மது,ஹிதயாதுல்லா பொருளாளர் ஹாஜா நஜுமுதீன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர்.
நிகழ்வின் போது TPLJI - UAE வின் உறுப்பினர்கள் ஜனாப்.முஸ்தபா,ஆசாத் அலி,அக்பர் அலி,நிசார் அலி,பைசல்,மாலிக்,முஹம்மது அலி,ஹபிப்ரஹ்மான்,ஹசன்,H.அனிஸ்,B.அனிஸ் மற்றும் பொது செயலாளர் பிர்தௌஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் TPLJI வின் உதவிகளை நினைவுகூர்ந்தும் பல ஆலோசனைகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்தார் நமது ஊர் தலைவர் ஜனாப்.சர்புதீன்.

கூட்டம் முடிந்தபின் ஹிதயாதுல்லா ஏற்பாடு செய்திருந்த விருந்துதில் அனைவரும் கலந்துகொண்டனர்.
---நமது செய்தியாளர் மு.முபாரக் அலி.

சனி, நவம்பர் 26

ஒரே இன்னிங்ஸ் சதம் மற்றும் 5 விக்கெட்: சாதனை பட்டியலில் இணைந்தார், அஸ்வின்.


* புதுமாப்பிள்ளையான இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த 25 வயதான அஸ்வின் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி கலக்கி வருகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்த டெஸ்டில் சதம் அடித்ததுடன் (103 ரன்), ஏற்கனவே பந்து வீச்சிலும் முத்திரை பதித்து இருந்தார். அவர் முதல் இன்னிங்சில் 156 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 49 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே இன்னிங்சில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார். அதே சமயம் இந்த சாதனையை இரண்டு இந்தியர்கள் ஏற்கனவே செய்துள்ளனர். 1956-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் வினோமன்கட்டும் (184 ரன் மற்றும் 5-196), 1962-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் பாலி உம்ரிகரும் (172 ரன் மற்றும் 5-107) இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
 ஒரே இன்னிங்ஸ் சதம் மற்றும் 5 விக்கெட்: சாதனை பட்டியலில் இணைந்தார், அஸ்வின்
* ஒட்டுமொத்த டெஸ்ட் வரலாற்றில், ஒரே இன்னிங்சில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய 20-வது வீரர் அஸ்வின் ஆவார். இந்த சிறப்பம்சம் இதுவரை 27 முறை நிகழ்த்தப்பட்டுள்ளன. கடைசியாக தென்ஆப்பிரிக்காவின் காலிஸ் 2002-ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இந்த சாதனையை படைத்திருந்தார். அவர் 1999-ம் ஆண்டும் இந்த சாதனையை செய்திருந்தார்.
 
* அஸ்வின் பேட்டிங் வரிசையில் 8-வது வீரராக களம் இறங்கி இந்த சதத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த வரிசையில் இந்திய தரப்பில் இதுவரை 13 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் தரப்பில் 11 சதங்கள் 8-வது வரிசையில் எடுக்கப்பட்டிருக்கின்றன.
 
* இந்த டெஸ்டில் இரு அணிகளின் முதல் இன்னிங்சிசை எடுத்துக் கொண்டால், வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் 6 பேரும், இந்திய தரப்பில் 5 பேரும் 50 ரன்களுக்கு மேல் அதாவது மொத்தம் 11 பேர் அரைசதம் விளாசியிருக்கிறார்கள். டெஸ்டின் முதல் இன்னிங்சில் இரு அணி வீரர்களையும் சேர்த்து 11 அரைசதங்கள் அடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 6 டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் தலா 10 அரைசதங்கள் எடுக்கப்பட்டதே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

புதிய முறைப்படி 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் பெற வேண்டுமா...

அலைந்து திரிந்து, 6 மாதங்களுக்கு பின்பு பாஸ்போர்ட் வாங்கிய காலமெல்லாம் மலையேறி விட்டது. தற்போது எந்த அலைச்சலுமின்றி, உட்கார்ந்த இடத்திலிருந்தே 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் நம் கையில் வந்து சேர்ந்தால் மகிழ்ச்சி தானே! 

முன்பெல்லாம் ஒரு பாஸ்போர்ட்டை விண்ணப்பித்து விட்டு, பல மாதங்கள் காத்திருக்க வேண்டியதாய் இருக்கும். ஆனால் புதியதாக நிறுவப்பட்ட 'பாஸ்போர்ட் சேவக்கேந்திரா' என்ற நிறுவனத்தின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள்ளேயே பெற்று விடலாம். 

இதுகுறித்து, ரீஜினல் பாஸ்போர்ட் அதிகாரி கே. ஸ்ரீகர் ரெட்டி கூறுகையில், 'வழக்கமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது, வண்ணப்பதாரரின் ஆவணங்கள் அனைத்தும், காவல்துறை அதிகாரிகளின் சரிபார்த்தலுக்காக அஞ்சல் முறையில் அனுப்பப் படும். அதனால், அதிக நாட்கள் ஆகும். ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய முறையின்படி, அனைத்தும் ஆன்லைன் முறை என்பதால் பாஸ்போர்ட்டினை கையில் பெற அதிகப்பட்சமாகவே 30 நாட்கள் தான் ஆகும்' என்று கூறினார்.  

மேலும் இதுகுறித்த எந்த கேள்வியையும், www.passportindia.gov.in என்ற இடிணயதளம் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் பரிந்துரை மின் கட்டணம் 2 மடங்கு உயர்வு.


சென்னை : மின்கட்டணத்தை 2 மடங்குக்கும் மேல் உயர்த்த கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் அளித்த மனு தொடர்பான விசாரணை நேற்று நடந்தது. மக்கள் கருத்து கேட்டபின் 3 மாதத்துக்குள் புதிய மின்கட்டணம் நடைமுறைக்கு வருகிறது. புதிய பரிந்துரையின்படி வீடுகளுக்கான மின்கட்டணம் யூனிட்டுக்கு 75 பைசாவில் இருந்து ரூ.2 ஆக உயர்கிறது. கடைகளுக்கு ரூ.4.50ல் இருந்து ரூ.7 ஆக கட்டணம் உயரும்.
தற்போதைய மின் கட்டணம் :

1 முதல் 50 யூனிட்    75 காசு
51 முதல் 100 யூனிட்    85 காசு
101 முதல் 200 யூனிட்    ரூ.1.50    201 முதல் 600 யூனிட்    ரூ.2.20
601 யூனிட்க்கு மேலே    ரூ.4.05 

வர்த்தக நிறுவனங்களுக்கு :
1 முதல் 100 யூனிட்    ரூ.4.30
100 முதல் 200 யூனிட்    ரூ.5.30
200 யூனிட்க்கு மேல்    ரூ.6.50

உயர்த்தவுள்ள புதிய மின்கட்டணம் :
0 முதல் 200 யூனிட்    ரூ.2
201 முதல் 500 யூனிட்    ரூ.3.50
500 யூனிட்டுக்கு மேல்    ரூ.5.75

வியாழன், நவம்பர் 24

ஜனாப்.S.FOWJIL AMEEN அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அஸ்ஸலாமு அலைக்கும்.
THIRUPPANANDAL JAMATHUL ISLAMIYA U.A.E யின் முன்னாள் தலைவர் ஜனாப்.ஷேக் அலாவுதீன் இவர்களின் மகன் ஜனாப்.S.FOWJIL AMEEN அவருக்கு அழகான ஆண் குழந்தை 22 - 11 - 2011 அன்று இரவு 11 .40க்கு பிறந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். 

லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு.

லிட்டருக்கு 97 கிமீ நானோ பைக்கை தஞ்சையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்
Nano Bike
தஞ்சாவூரிலுள்ள பொன்னையா ராமஜெயம் பல்கலைகழகத்தின் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பிரிவில் பயின்று வரும் இறுதியாண்டு மாணவர்கள் இந்த நானோ பைக்கை வடிவமைத்துள்ளனர். அந்த கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர்கள் ஆலோசனையுடன் இந்த பைக்கை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த பைக்குகான உதிரிபாகங்களை நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் உள்ள ஹை-டெக் என்ற தனியார் நிறுவனம் ஒன்று வடிவமைத்துக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், ஹை-டெக் நிறுவனத்தின் வளாகத்தில் இந்த நானோ பைக்கை நேற்று சோதனை நடத்தி காண்பிக்கப்பட்டது.

பார்ப்பதற்கு சைக்கிள் போன்று இருக்கும் இந்த பைக்கில் ஒருவர் மட்டுமே செல்லலாம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இந்த நானோ பைக் 97 கிமீ செல்லும் என மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த பைக் அதிகபட்சம் மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஸ்டீல், அலுமினியம், அலாய் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நானோ பைக் வெறும் 25 கிலோ எடை மட்டுமே கொண்டது. இந்த பைக்கின் மெயின் ப்ரேம் ஸ்டீலில் உருவாக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க பிளாஸ்ட்டிக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சப்தத்தை குறைக்கும் வகையில் எஞ்சின் மற்றும் சக்கரங்களை இணைப்பதற்கு செயினுக்கு பதில் பெல்ட் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்குக்கு காப்புரிமை பெறுவதற்கான முயற்சிகளை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக அந்த கல்லூரியின் பேராசிரியர் தாஸ் நம்மிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த நானோ பைக்கை வர்த்தக ரீதியில் தயாரிப்பதற்கான சாத்திக்கூறுகள் இருப்பதாகவும், ஒரு பைக்கை தயாரிக்க ரூ.8,000 மட்டுமே செலவாகும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

கனமழை எதிரொலி புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.

சென்னை: புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னையில் காலை முதல் விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், சாந்தோம், மந்தைவெளி உள்ளிட்ட இடங்களிலும், பல்வேறு புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது. காலை நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வந்ததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், அலுவலர்களும் பாதிக்கப்பட்டனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு தொடங்கிய கனமழை காலைவரை நீடித்தது.இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கனமழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

புதன், நவம்பர் 23

துபாய் வருகை புரிந்த நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன்க்கு வரவேற்பு.


துபாய் :23.11.2011 புதன்கிழமை காலை வருகை புரிந்த திருப்பனந்தாள் நாட்டாண்மைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.நாட்டாண்மை அவர்களை THIRUPPANANDAL JAMATHUL ISLAMIYA அமைப்பாளர் .முஹம்மது  தாஹா பொன்னாடை அணிவித்து   கௌரவித்தார்.
அமைபின் பொதுச்செயலாளர்  ச.முஹம்மது பிர்தௌஸ்,மற்றும் ஊடகத்துறை   
  செயலாளர் மு.முபாரக் அலி  உள்ளிட்டோர் இவ்வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.


நமது ஊர் கபர்ஸ்தான் சுத்தம் செய்த பணி நிறைவுபெற்றது.

நமது ஊர் கபர்ஸ்தான் சுத்தம் செய்த பனி நிறைவுபெற்றது.
நமது ஊர் ஒத்துழைப்புடன் நமது ஊர் AUDITOR மகன் ரிபாய்,ஜாபர்  சாதிக்,சவுத் பைசல்,அக்ரம் மற்றும் ஊர் நண்பர்கள் இப்பணியில் ஈடுபட்டு சிறப்பாக முடித்தனர். 

                          அன்று :


.                                   
                        இன்று:





1973ம் ஆண்டை நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு; 2073ம் ஆண்டை நோக்கி விலைவாசி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
Rupee
அனைத்து நாடுகளின் கரன்சிகளும், அமெரிக்க டாலருடன் ஒப்பிடப்பட்டே மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி ஒரு அமெரிக்க டாலருக்கு எத்தனை இந்திய ரூபாய்கள் என்பதை வைத்தே ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு, ஒரு டாலருக்கு 48 ரூபாய் என்றால் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் என்று அர்த்தம். அதே நேரத்தில் ஒரு டாலருக்கு 52 ரூபாய் என்றால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது என்று அர்த்தம்.

இப்போது ஐரோப்பாவில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக, அந்த நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை வங்கிகளும், முதலீட்டாளர்களும் தவிர்த்து வருகின்றன. இதையடுத்து தங்கத்திலும், டாலர்களிலும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் டாலரின் மதிப்பும் அதிகரித்து வருகின்றன. மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வாங்க டாலரில் தான் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும். ஆனால், டாலரில் மற்ற முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்து அதை போட்டி போட்டி வாங்க ஆரம்பித்திருப்பதால், அதன் விலை உயர்ந்து வருகிறது.

இந்த விலை மேலும் உயர்வதற்கு முன் நாமும் அதை வாங்கிக் குவிப்பதே நல்லது என்று கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களும் பணத்தை டாலர்களில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் டாலருக்கு திடீரென டிமாண்ட் அதிகமாகிவிட்டது. எந்தப் பொருளுக்கு டிமாண்ட் அதிகமாகிறதோ அதற்கு தட்டுப்பாடும், இதனால் அதன் மதிப்பும் உயர்வது அதிகம். இது தான் டாலர் விஷயத்திலும் நடந்துள்ளது.

டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டதால், ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துவிட்டது. அதே போல ஐரோப்பிய கரன்சியான யூரோ, சீன கரன்சியான யென் ஆகியவற்றின் மதிப்பும் சரிந்துவிட்டது.

நேற்று மட்டும் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 81 காசு வரை குறைந்தது (அதாவது 0.8% வீழ்ச்சி). இன்று காலை நிலவரப்படி 1 அமெரிக்க டாலரைத் தந்தால், ரூ. 52.56 கிடைக்கும். இது கடந்த வாரத்தில் ரூ. 51 ஆகவே இருந்தது.

இதற்கு முன் 1973ம் ஆண்டில் தான் இந்திய ரூபாயின் மதிப்பு 52.72 என்ற அளவுக்குச் சரிந்தது. 38 ஆண்டுகளுக்குப் பின் கிட்டத்தட்ட அதே கீழ்மட்ட அளவை இந்திய ரூபாயின் மதிப்பு எட்டியுள்ளது. (இந்த ஆண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 17 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க தனது கையிருப்பில் உள்ள டாலர்களை சந்தையில் புழக்கத்தில் விட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தன்னிடம் உள்ள அமெரிக்க டாலர்களை விற்பனை செய்யவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

ரிசர்வ் வங்கியால் முழுவதும் தடுக்க முடியாது:

ஆனாலும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதை முற்றிலுமாக தடுக்கும் சக்தி ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் கோபாலன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதில் ரிசர்வ் வங்கியிடம் ஒரு அளவுக்குத் தான் சக்தி உண்டு. மதிப்பு சரிவதைத் முற்றிலும் தடுக்கும் ஆற்றல் அதனிடம் இல்லை என்றார்.

ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், இந்தியாவில் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுத்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவு அதிக லாபம் கிடைக்கும்.

இறக்குமதி செய்யும் செலவு அதிகமாவதால், பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்க அதிக பணத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலவழிக்க வேண்டி வரும் (மீண்டும் பெட்ரோல் விலை உயரும்?!). அதே போல மருந்துகள், ரசாயணம் (உரம் விலையும் மேலும் உயரலாம்), எலெக்ட்ரானிக் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள், ரப்பர் ஆகியவற்றை இறக்கமதி செய்ய நாடு அதிக பணத்தை செலவு செய்ய வேண்டி வரும்.

அதே நேரத்தில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் கிடைக்கும். ஜவுளி, நகைககள், நவரத்தினக் கற்கள் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளுக்கு போன வாரத்தில் கிடைத்ததை விட அதிகமான பணம் கிடைக்கும்.

ஆனால், மொத்தத் தேவையில் 80 சதவீத பெட்ரோலிய எண்ணெய்யை இறக்குமதி செய்யும் தேசம் இந்தியா. இந் நிலையில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், பெட்ரோல், டீசலின் விலை மேலும் உயர்ந்து, அது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம் உயர்ந்தால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் (தமிழக மக்களுக்கு 'போனஸாக' பால் விலை, பஸ் கட்டணம் ஆகியவை வரலாறு காணாத அளவுக்கு ஏற்கனவே உயர்த்தப்பட்டுவிட்டது. இதனுடன் சேர்ந்து மேலும் மற்ற விலைகளும் உயர்ந்து வாட்டி எடுக்கும்)

இந் நிலையில் சர்வதேச அளவில் நிலைமை சரியாகாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 54 ரூபாய் வரையில் கூட சரியலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஆக, இதற்கு முந்தைய பாராவில் சொல்லியிருப்பது நடக்கலாம்.

மேலும் டாலரில் அதிகமாக முதலீடு செய்வதற்காக பங்குச் சந்தைகளில் போட்டு வைத்துள்ள பணத்தையும் பல முதலீட்டாளர்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், இந்திய பங்குச் சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

'நெசவாளர்கள் தோழன்' சென்னை பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் விருது.

சென்னை: நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் பொது மக்கள் பயன் பெறும் வகையில் சிறப்பாக சேவை செய்தமைக்காக சென்னை பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.
Madras University
இது குறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் 42வது நாட்டு நலப்பணி திட்ட நிறுவன நாள் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் சிறப்பாக செயலாற்றிய பல்கலைக்கழகங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

நாட்டு நலப்பணித் திட்டங்கள் மூலம் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய சென்னை பல்கலைக்கழகத்திற்கு முதல் பரிசு மற்றும் ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் முன்னிலையில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கினைப்பாளர் என்.ராஜா உசைனிடம் வழங்கினார்.

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் 'கைத்தறிக்கு கை கொடுப்போம்' என்ற திட்டத்தின் மூலம் ரூ.3.8 கோடி மதிப்புள்ள கைத்தறி துணிகளை விற்று 6 லட்சம் நெசவாளர் குடும்பங்களுக்கு உதவியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்


பொது
சம்பவம்

செவ்வாய், நவம்பர் 22

நலம் தரும் பழங்கள்.





உடல் நலம் - நலமுடன் வாழ சில குறிப்புகள்

பழங்களில் இரும்பு சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற "அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், பல வகையான வைட்டமின்களும் உள்ளன. பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

1. ஆப்பிள் - ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். ஆப்பிள் ஜுஸ் குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கை குணமாக்கும்.

2. ஆரஞ்சு - எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடலாம். ஓரஞ்சு உடலுக்கு புத்துணர்ச்சியும் வலுவும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

3. திராட்சை - சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணமாக்கும் . ஒரு "வுன்ஸ் திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர சிறு நீர் தாரைகளில் உண்டாகும் கல் கரைந்துவிடும்.

4. மாதுளை - இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு நல்லது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி நிறைய உள்ளது.

5. அன்னாசி- "அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன் படுகிறது. உடல் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

6. சப்போட்டா - இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளது. சப்போட்டாவுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

7. பப்பாளி - பப்பாளி பழத்தை துண்டுகள் ஆக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் "ஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். தாய்ப்பால் சுரக்க பப்பாளி பயன்படும்.