இந்த வலைப்பதிவில் தேடு

சனி, நவம்பர் 26

ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் பரிந்துரை மின் கட்டணம் 2 மடங்கு உயர்வு.


சென்னை : மின்கட்டணத்தை 2 மடங்குக்கும் மேல் உயர்த்த கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் அளித்த மனு தொடர்பான விசாரணை நேற்று நடந்தது. மக்கள் கருத்து கேட்டபின் 3 மாதத்துக்குள் புதிய மின்கட்டணம் நடைமுறைக்கு வருகிறது. புதிய பரிந்துரையின்படி வீடுகளுக்கான மின்கட்டணம் யூனிட்டுக்கு 75 பைசாவில் இருந்து ரூ.2 ஆக உயர்கிறது. கடைகளுக்கு ரூ.4.50ல் இருந்து ரூ.7 ஆக கட்டணம் உயரும்.
தற்போதைய மின் கட்டணம் :

1 முதல் 50 யூனிட்    75 காசு
51 முதல் 100 யூனிட்    85 காசு
101 முதல் 200 யூனிட்    ரூ.1.50    201 முதல் 600 யூனிட்    ரூ.2.20
601 யூனிட்க்கு மேலே    ரூ.4.05 

வர்த்தக நிறுவனங்களுக்கு :
1 முதல் 100 யூனிட்    ரூ.4.30
100 முதல் 200 யூனிட்    ரூ.5.30
200 யூனிட்க்கு மேல்    ரூ.6.50

உயர்த்தவுள்ள புதிய மின்கட்டணம் :
0 முதல் 200 யூனிட்    ரூ.2
201 முதல் 500 யூனிட்    ரூ.3.50
500 யூனிட்டுக்கு மேல்    ரூ.5.75

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக